செய்திகள் :

சென்னையில் மழை எப்படி இருக்கும்?

post image

தமிழகத்தில் ஜூன் 29 வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கேரளம் மற்றும் தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இந்தாண்டு நல்ல மழைபொழிவை வழங்கி வருகின்றது. ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை மற்றும் புறநகரில் நல்ல மழை பெய்தது.

அதேவேளையில் கடந்த சில பகலில் வெய்யில் கொளுத்தி வரும் நிலையில், இரவில் மிதமான மழையும், அதோடு நல்ல காற்றும் நிலவி வருகின்றது. இதனிடையே தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்றிரவும் நல்ல மழைபொழிவு ஏற்பட்டது. இன்று காலையும் சிறுசிறு தூரலோடு இதமான காலநிலை மனதுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று(ஜூன் 23 முதல் 29 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

சென்னையை பொருத்தவரை..

ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சமாக 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழை..

சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) 11 செ.மீ., சோலையார் 10 செ.மீ. சின்கோனா 9 செ.மீ., வாலைபாறை 8 செ.மீ. கொள்ளிடம் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

நீட் தேர்வில் பணம்தான் விளையாடுகிறது: மு.க. ஸ்டாலின்

நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.2025 இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் முறைகேடு செய்து, பணத்தை பெற்றுக்கொண்டு... மேலும் பார்க்க

முருக பக்தர்கள் மாநாட்டு தீர்மானங்களை ஏற்கவில்லை: அதிமுக

முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கவில்லை என அதிமுக அறிவித்துள்ளது. மாநாட்டில், பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் பற்றி வெளியிடப்பட்ட விடியோ என்பது துளியும் ஏற்றுக்கொள்ள முடியா... மேலும் பார்க்க

குண்டர் தடுப்புச் சட்டத்துக்குள் சைபர் குற்றவாளிகள்: தமிழக அரசின் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் வரவேற்பு

தமிழகத்தில் இணையவழி (சைபர்) குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையாக அத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை உ... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 11 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று(ஜூன் 23)தமிழகத்தில் ஒருசில இட... மேலும் பார்க்க

பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக இன்று காலை சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்க... மேலும் பார்க்க

தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழகம் முழுவதும் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்களும் மாற்றப்பட்டுள்ளனர். 55 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கி தமிழக அரசு... மேலும் பார்க்க