எதிர்க்கட்சியைக் குறைத்து மதிப்பிட்டால் மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்: கார்...
``நீட் மதிப்பெண் குறைந்து விட்டது'' - மகளை அடித்தே கொன்ற ஆசிரியர்.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி
மகாராஷ்டிராவில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை அவரது தந்தை அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா சாங்கிலி மாவட்டத்தில் உள்ள நெல்கரஞ்சி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சாதனா போஸ்லே (17). இவர் 12-வது வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தை தோந்திராம் போஸ்லே அங்குள்ள பள்ளி ஒன்றில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

சாதனா மருத்துவம் படிப்பதற்காக நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இம்முறை நீட் எழுதி இருந்தார். ஆனால் சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவில் சாதனா மிகவும் குறைந்த மதிப்பெண் பெற்று இருந்தார். இதனால் அவரால் மருத்துவ கல்லூரியில் சேர முடியவில்லை.
இது குறித்து சாதனாவிடம் அவரது தந்தை தோந்திராம் கேட்டதற்கு, தவறான விடைகளால் நெகட்டிவ் மதிப்பெண் மூலம் மதிப்பெண் குறைந்துவிட்டதாக சாதனா கூறியுள்ளார்.
ஆத்திரம் அடைந்த தோந்திராம் கம்பை எடுத்து சாதனாவை சரமாரியாக அடித்து உதைத்தார். அவரது தாயார் தடுத்து நிறுத்தி சாதனாவை காப்பாற்றினார்.
ஆனால் தோந்திராம் சிறிது நேரம் கழித்து மீண்டும் தனது மகளை கம்பால் அடித்து உதைத்தார். இரவு முழுக்க தனது மகளை தோந்திராம் அடித்து உதைத்தார். காலையில் எழுந்து தோந்திராம் பள்ளிக்கு சென்றுவிட்டார். அவர் பள்ளியில் இருந்து திரும்பி வந்தபோது சாதனா மயங்கி கிடந்தார். உடனே மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். ஆனால் அங்கு சோதித்து பார்த்த மருத்துவர்கள் சாதனா ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து சாதனாவின் தாயார் போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து தோந்திராமை கைது செய்தனர். மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தந்தையே மகளை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.