செய்திகள் :

மேட்டூர் அணை 16 கண் மதகு பாலத்தில் பராமரிப்புப் பணி: சென்னை ஐஐடி பேராசிரியர் ஆய்வு

post image

சேலம் : மேட்டூர் அணையின் 16 கண் மதகு பாலம் பகுதியில் நடைபெற்றுவரும் பராமரிப்புப் பணிகளை சென்னை ஐ.ஐ.டி. கட்டடவியல் துறை பேராசிரியர் அழகு சுந்தரமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.

மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் போது 16 கண் மதகு பாலம் வழியாக உபரி நீர் திறக்கப்படும். இதன் மூலம் 30 டி.எம்.சி. வரை தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இந்நிலையில் 19 கோடி ரூபாய் மதிப்பில் 16 கண் மதகு பாலத்தின் தூண்கள் மற்றும் வளைவுகளை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை இன்று சென்னை ஐ.ஐ.டி.யின் கட்டடவியல் துறை பேராசிரியர் அழகு சுந்தர மூர்த்தி, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் சென்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து அழகு சுந்தரமூர்த்தி கூறுகையில் சேதம் அடைந்த கான்கிரீட் பூச்சுகளை அகற்றிவிட்டு மைக்ரோ கான்கிரீட் பூசப்பட்டு தூண்கள் பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. மைக்ரோ கான்கிரீட் பூசுவதன் மூலம் 50 முதல் 100 ஆண்டுகள் வரை தூன்கள் பலமாக இருக்கும் என்றார்.

16 கண் மதகு பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டு அதன் அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது சேலம் மேல் காவிரி வடிநிலவட்ட கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார், அணை நிர்வாக பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவிப் பொறியாளர் சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நீட் தேர்வில் பணம்தான் விளையாடுகிறது: மு.க. ஸ்டாலின்

நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.2025 இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் முறைகேடு செய்து, பணத்தை பெற்றுக்கொண்டு... மேலும் பார்க்க

முருக பக்தர்கள் மாநாட்டு தீர்மானங்களை ஏற்கவில்லை: அதிமுக

முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கவில்லை என அதிமுக அறிவித்துள்ளது. மாநாட்டில், பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் பற்றி வெளியிடப்பட்ட விடியோ என்பது துளியும் ஏற்றுக்கொள்ள முடியா... மேலும் பார்க்க

குண்டர் தடுப்புச் சட்டத்துக்குள் சைபர் குற்றவாளிகள்: தமிழக அரசின் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் வரவேற்பு

தமிழகத்தில் இணையவழி (சைபர்) குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையாக அத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை உ... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 11 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று(ஜூன் 23)தமிழகத்தில் ஒருசில இட... மேலும் பார்க்க

பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக இன்று காலை சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்க... மேலும் பார்க்க

தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழகம் முழுவதும் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்களும் மாற்றப்பட்டுள்ளனர். 55 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கி தமிழக அரசு... மேலும் பார்க்க