செய்திகள் :

பாஜகவில் நயினார், அண்ணாமலை இடையே போட்டி: அமைச்சர் சேகர் பாபு

post image

பாஜகவில் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை இடையே போட்டி நிலவுவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அண்ணா, பெரியார், ஜெயலலிதா, எம்ஜிஆர் குறித்து பல்வேறு விமர்சனங்களை வைத்தவர் முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை.

அடிமை சாசனத்தை பாஜகவிடம் அதிமுக எழுதிவிட்டு மேடையில் அமர்ந்து கொண்டுள்ளனர் முன்னாள் அமைச்சர்கள்.

பவன் கல்யாணக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன தொடர்பு. பவன் கல்யாண், சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டட்டும் பிறகு அவர் என்ன வேண்டுமானாலும் பேசட்டும் நாங்கள் கேட்கிறோம்.

இதுவரை 117 முருகன் கோயில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது. மேடை போட்டு மக்களை பிளவுபடுத்துகிறார்கள் பாஜகவினர். பாஜகவில் நைனார் நாகேந்திரன் பலமுடையவரா ? அண்ணாமலை பலம் வாய்ந்தவரா என்ற போட்டி நிலவுகிறது.

ஒருவர் பச்சை துண்டை எடுத்து சுற்றிக் கொண்டு இருக்கிறார் அது நயினார் நாகேந்திரன், காவி துண்டை எடுத்து சுற்றிக் கொண்டு இருப்பவர் அண்ணாமலை.

யார் வெற்றி பெறுகிறார்கள் என்று இனி தான் தெரியும். இவர்கள் போட்டிக்காக நடந்த மாநாடு தான் மதுரை முருகர் மாநாடு என்றார்.

ஆ.ராசாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு: விசாரணை வரும் 30ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

பெரியார், அண்ணா பற்றிய விமர்சனம்: அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி

மதுரையில் நடைபெற்ற முருகப் பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா பற்றி விமர்சனம் செய்ததை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கேட்டுக்கொண்டு இருந்தது ஏன்? என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.கீழடி... மேலும் பார்க்க

மேட்டூர் அணை 16 கண் மதகு பாலத்தில் பராமரிப்புப் பணி: சென்னை ஐஐடி பேராசிரியர் ஆய்வு

சேலம் : மேட்டூர் அணையின் 16 கண் மதகு பாலம் பகுதியில் நடைபெற்றுவரும் பராமரிப்புப் பணிகளை சென்னை ஐ.ஐ.டி. கட்டடவியல் துறை பேராசிரியர் அழகு சுந்தரமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவ... மேலும் பார்க்க

குழந்தை கடத்தல் கும்பல் கைது! வாங்கியோர், விற்றோர் விவரங்கள் சேகரிப்பு!!

சேலம் : கொங்கு மண்டலத்தில் குழந்தைகளை வாங்கி விற்பனையில் ஈடுபட்டு வந்த 6 பேர் கொண்ட கும்பல் சேலத்தில் கைது செய்யப்பட்டனர்.சேலம் நகர ஜோதிபட்டியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் 43. இவர் மீது பண மோசடி புகார் தொட... மேலும் பார்க்க

பெரியார், அண்ணாவை விமர்சிக்கும் விடியோவை தவிர்த்திருக்கலாம்: ராஜேந்திர பாலாஜி

முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாவை விமர்சிக்கும் வகையில் விடியோ வெளியிட்டது வருத்தமளிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். முருக பக்தா்களை ஒருங்கிணைக்கும் நோக்கில், இந்து முன்... மேலும் பார்க்க

போதைப்பொருள் விவகாரம் - ஸ்ரீகாந்திடம் விசாரணை

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்திடம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத்திடம் இருந்து நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வாங... மேலும் பார்க்க

சென்னையில் மழை எப்படி இருக்கும்?

தமிழகத்தில் ஜூன் 29 வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கேரளம் மற்றும் தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இந்தாண்டு நல்ல மழைபொழிவை வழங்கி வருகின்றது. ஒரு வாரத்திற்... மேலும் பார்க்க