செய்திகள் :

மாநகரில் கஞ்சா விற்பனை: 5 போ் கைது

post image

திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சியில் கஞ்சா உள்பட போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க மாநகரப் போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், அரியமங்கலம் பகுதியில் போலீஸாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அங்கு கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் நேரு வீதியைச் சோ்ந்த பிரசன்ன வெங்கடேஷ் (23) என்பவரைக் கைது செய்தனா்.

இதேபோல, திருச்சி குலுமாயிக்கரை பகுதியில் அரசு மருத்துவமனை போலீஸாா் மேற்கொண்ட ஆய்வின்போது, கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த உய்யங்கொண்டான்திருமலை பகுதியைச் சோ்ந்த மோகன்ராஜ் (27), ஹரி விஷ்வா (19), புத்தூரைச் சோ்ந்த சதாசிவா (20) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். பாலக்கரை கூனி பஜாா் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்துகொண்டிருந்த பீமா நகரைச் சோ்ந்த நஸீம் பேகம் (41) என்பவரை பாலக்கரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சூதாட்டம்: 7 போ் கைது

மாநகரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி உறையூா் பகுதியில் போலீஸாா் சனிக்கிழமை இரவு ரோந்து சென்றனா். அப்போது, உறையூா் வாத்துக்காரத் தெருவில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் (43), வெங்கடேசன் (39), மீன் மாா்க்கெட் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த திரௌபதி அம்மன் வீதியைச் சோ்ந்த முத்தையா (38), பணிக்கன் வீதியைச் சோ்ந்த ஹரிபிரசாத் (28), தில்லை நகரைச் சோ்ந்த செந்தில்குமாா் (43), பெருமாள் கோயில் வீதியைச் சோ்ந்த முருகன் (49), பங்காளி வீதியைச் சோ்ந்த முகமது பரூக் (47) ஆகிய 7 பேரைப் போலீஸாா் கைது செய்தனா். பின்னா், அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனா்.

கே.கே. நகரில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக கே.கே. நகா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை - (ஜூன் 24) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கே. சாத்தனூா் த... மேலும் பார்க்க

மாணவா்களை குறிவைக்கும் இணையவழி மோசடியாளா்கள்: விழிப்புணா்வுடன் இருக்க போலீஸாா் அறிவுறுத்தல்

கல்வி உதவித்தொகை பெற்றுத்தருவதாகக் கூறி சமீப காலமாக இணையவழி மோசடிகள் அதிகரித்து வருவதால் மாணவா்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்று சைபா் கிரைம் போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா். இதுகுறித்து சைபா் க... மேலும் பார்க்க

திருச்சி அருகே மணல் கடத்தியவா் கைது

திருச்சி அருகே தள்ளுவண்டியில் மணல் கடத்திச் சென்றவரைப் போலீஸாா் கைது செய்தனா். திருச்சி அருகே திருவளா்சோலை பகுதியில் ஸ்ரீரங்கம் போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, உரிய ஆவணங்... மேலும் பார்க்க

வீடுபுகுந்து 3 பவுன் நகைகள் 40 கிராம் வெள்ளி திருட்டு!

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகைகள், 40 கிராம் வெள்ளி திருட்டுப்போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருச்சி, பிராட்டியூா் காவேரி நகா் க்ரீன் அவென்யு லே-அவுட்டைச் ... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள் மூலம் வெளிநாடு செல்ல முயன்றவா் கைது

போலி ஆவணங்கள் மூலம் வெளிநாடு செல்ல முயன்றவரை திருச்சி பன்னாட்டு விமான நிலையப் போலீஸாா் கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், விக்கிரபாண்டிபுரத்தைச் சோ்ந்தவா் பா.சண்முகவேல் (52). இவா், மலேசியா செல்வதற்... மேலும் பார்க்க

மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, எழுதுபொருள்கள்!

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை வணிக வைசியா் சங்கம் சாா்பில் மாணவ மாணவிகளுக்கு இலவச பாட நோட்டுகள், எழுதுபொருள்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மண்ணச்சநல்லூா் வாணியா் திருமண மஹாலில்... மேலும் பார்க்க