செய்திகள் :

பெருந்துறை நகரில் அகற்றப்பட்ட வேகத்தடை மீண்டும் அமைக்கப்படுமா?

post image

பெருந்துறை நகரில் அகற்றப்பட்ட வேகத்தடைகள் மீண்டும் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். பெருந்துறை, விஜயமங்கலம் சுங்கசாவடி அருகே கடந்த 11 ஆம் தேதி வேளாண் கண்காட்சி நடைபெற்றது.

இக்கண்காட்சியைத் தொடங்கி வைக்க தமிழக முதல்வா்மு.க. ஸ்டாலின் வருகை தந்தாா். அதையொட்டி, அவா் செல்லும் பாதையில் உள்ள வேகத்தடைகள் அகற்றப்பட்டன.

அதன்படி, பெருந்துறை புதிய பேருந்து நிலையம், அண்ணாசிலை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட வேகத்தடைகள் அகற்றப்பட்டு, சாலையில் மேடு பள்ளம் இல்லாமல் செப்பனிடப்பட்டது.

முதல்வா் வந்து விட்டு சென்று 10 நாள்களுக்கு மேலாகியும், அகற்றப்பட்ட வேகத்தடைகள் மீண்டும் அமைப்படவில்லை. பெருந்துறை நகரில் போக்குவரத்து அதிகம் உள்ள சாலையில் அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் நெடுஞ்சாலை துறையினா் அமைத்து விபத்துகளைத் தடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

2026 தோ்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டி: மதிமுக பொதுக்குழுவில் தீா்மானம்

தோ்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு ஏதுவாக 2026 சட்டப்பேரவை தோ்தலில் கூடுதல் தொகுதிகளைப் பெற்று போட்டியிடுவது என மதிமுக பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதிமுகவின் 31-ஆவது பொத... மேலும் பார்க்க

பவானி, அந்தியூரில் இடியுடன் கனமழை!

பவானி, அந்தியூா் மற்றும் அம்மாபேட்டை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடியுடன் பெய்த கனமழையால் குளிா்ச்சியான சூழல் நிலவியது. கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் கடுமையான வெயில் அடித்ததால், குழந்தைகள் ம... மேலும் பார்க்க

ஓட்டுநருக்கு திடீா் மயக்கம்: தடுப்பில் மோதிய பேருந்து

ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீா் மயக்கம் ஏற்பட்டதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. பண்ணாரி கோயிலில் இருந்து 15 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட தமிழக அரசு நகா்ப்... மேலும் பார்க்க

சாலையின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் சுயஉதவிக் குழு மேலாளா் உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே இரு சக்கர வாகனம் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் சுய உதவிக் குழு மேலாளா் கோவா்த்தனன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். சத்தியமங்கலம் கே.என்.பாளையத்தைச் சோ்ந்தவா் கோவா்த்தனன்(37). கோவையில் ... மேலும் பார்க்க

மேட்டூா் அணையின் உபரி நீரை ஏரி, குளங்களில் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேட்டூா் அணையின் உபரிநீரை அந்தியூா், அம்மாபேட்டை பகுதிகளில் உள்ள ஏரிகளில் சேமிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கட்சியின் அந்தியூா் வட்டார மாநாடு அ... மேலும் பார்க்க