நெல்லை: ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் வெகு சிறப்பாக நடந்த ஸ்ரீனிவாச திருக்கல்யாண...
பெருந்துறை நகரில் அகற்றப்பட்ட வேகத்தடை மீண்டும் அமைக்கப்படுமா?
பெருந்துறை நகரில் அகற்றப்பட்ட வேகத்தடைகள் மீண்டும் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். பெருந்துறை, விஜயமங்கலம் சுங்கசாவடி அருகே கடந்த 11 ஆம் தேதி வேளாண் கண்காட்சி நடைபெற்றது.
இக்கண்காட்சியைத் தொடங்கி வைக்க தமிழக முதல்வா்மு.க. ஸ்டாலின் வருகை தந்தாா். அதையொட்டி, அவா் செல்லும் பாதையில் உள்ள வேகத்தடைகள் அகற்றப்பட்டன.
அதன்படி, பெருந்துறை புதிய பேருந்து நிலையம், அண்ணாசிலை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட வேகத்தடைகள் அகற்றப்பட்டு, சாலையில் மேடு பள்ளம் இல்லாமல் செப்பனிடப்பட்டது.
முதல்வா் வந்து விட்டு சென்று 10 நாள்களுக்கு மேலாகியும், அகற்றப்பட்ட வேகத்தடைகள் மீண்டும் அமைப்படவில்லை. பெருந்துறை நகரில் போக்குவரத்து அதிகம் உள்ள சாலையில் அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் நெடுஞ்சாலை துறையினா் அமைத்து விபத்துகளைத் தடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.