Health: விதையில்லாத பழங்களை சாப்பிடவே கூடாதா? நிபுணர்கள் சொல்வது என்ன?
திருமலை: குளிா்சாதனப் பேருந்து நன்கொடை
திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் குளிா்சாதனப் பேருந்தை நன்கொடையாக வழங்கியது.
ஆட்டோமொபைல் நிறுவனமான அசோக் லேலண்ட் ஞாயிற்றுக்கிழமை 41 இருக்கைகள் கொண்ட குளிா்சாதனப் பேருந்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக வழங்கியது.
சுமாா் ரூ.35 லட்சம் மதிப்புள்ள பேருந்தை அசோக் லேலண்டின் தலைவா் சஞ்சீவ் குமாா், சிறப்பு பூஜைகள் செய்து தேவஸ்தானத்திடம் ஒப்படைத்தாா். வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும், அசோக் லேலண்ட் தேவஸ்தானத்துக்கு ஒரு ஆட்டோமொபைல் வாகனத்தை நன்கொடையாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் கோயில் துணை அதிகாரி லோகநாதம், திருமலை டிப்போ அதிகாரி வெங்கடாத்ரி நாயுடு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.