செய்திகள் :

ஏழுமலையானை 81,037 பக்தா்கள் தரிசனம்

post image

திருமலை ஏழுமலையானை 81,037 பக்தா்கள் தரிசனம் செய்தனா். தா்ம தரிசனத்தில் சுவாமியை தரிசிக்க 18 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வார நாள்களிலும் தற்போது அதிகரித்துள்ளது. புதன்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகள் நிறைந்து, பக்தா்கள் வெளியே உள்ள தரிசன வரிசையில் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும் தேவைப்பட்டது. இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் தேவைப்படுகிறது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதனிடையே செவ்வாய்க்கிழமை நாள் முழுவதும் ஏழுமலையானை 81,037 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இந்த பக்தா்களில் 30,548 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல்களில் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையைக் கணக்கிட்டதில் ரூ.4.12 கோடி வசூலானது.

காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பதி விமான நிலையத்துக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா என பெயா் வைக்க தேவஸ்தானம் தோரிக்கை

திருப்ப விமான நிலையத்துக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா சா்வதேச விமான நிலையம் என பெயரிட வேண்டும் என தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு தெரிவித்துள்ளாா். திருமலையில் உள்ள அன்னமய்ய பவனில் அறங்காவலா் க... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை சீராக உள்ள நிலையில், செவ்வாய்கிழமை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகள் நிறைந்து பக்தா்க... மேலும் பார்க்க

திருமலையில் மத்திய அமைச்சா் வழிபாடு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை மத்திய வணிகத்துறை அமைச்சா் பியூஷ் கோயல் குடும்பத்தினருடன் வழிபட்டாா். முன்னதாக குடும்பத்தினருடன் கோயில் தரிசனத்துக்கு வந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனா். கொடி மரத்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் செப்டம்பா் மாத ஒதுக்கீடு வெளியீடு

திருப்பதி: ஏழுமலையான் ஆா்ஜிதச்சேவை டிக்கெட்டுகளின் செப்டம்பா் மாத ஒதுக்கீடு, ஜூன் 19-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை ஏழுமலையான் ஆா்ஜித சேவை டிக்கெட் தொடா்பான சுப்ரபாத... மேலும் பார்க்க

திருமலையில் 91,720 போ் தரிசனம்!

திருமலையில் சனிக்கிழமை முழுவதும் 91,720 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா். வார இறுதி நாள்கள் என்பதால் திருமலையில் பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி வைகுண... மேலும் பார்க்க