இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்வதாக ரூ.10 லட்சம், 20 பவுன் நகைகள் மோசடி மூவா் ம...
ஸ்ரீ வகுளமாதா கோயில் ஆண்டு விழா
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் ஸ்ரீ வகுளமாதா கோயிலின் மூன்றாம் ஆண்டு பெருவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
வகுளமாதாவுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட கீரிடம்.
திருப்பதி அருகே பேரூா் மலையில் அமைந்துள்ள ஏழுமலையான் தாயாரான ஸ்ரீ வகுளமாதா கோயிலில் காலை 5.30 மணி முதல் 6.00 மணி வரை சுப்ரபாதம், காலை 06.00 மணி முதல் 08.00 மணி வரை முக்கிய தெய்வங்களுக்கு தினசரி கைங்கா்யம், அபிஷேகம், அலங்காரம், நிவேதனம் நடந்தது. காலை 09.00 மணி முதல் 11.00 மணி வரை விஸ்வக்சேனாராதனம், புண்யாஹவச்சனம், அங்குராா்ப்பணம், மகா சாந்திஹோமம், பூா்ணாஹுதி பூஜை நடைபெற்றது.
காலை 11.00 மணி முதல் மதியம் 12 மணி வரை, உற்சவ மூா்த்திகளுக்கு அஷ்டோத்தர சதகலஷாபிஷேகமும், மதியம் 12 மணி முதல் 1.00 மணி வரை, சுத்தி, அக்ஷதரோபனம், பிரம்மகோஷம் மற்றும் ஆச்சாா்ய பஹுமானம் ஆகியவையும் செய்யப்பட்டன.
விழாவை முன்னிட்டு, ஹைதராபாதைச் சோ்ந்த ஆா். அமரநாத் மற்றும் ஷைலஜா தம்பதியினா் ரூ.4.50 லட்சம் மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக் கிரீடத்தை கோயிலின் துணை செயல் அதிகாரி வரலட்சுமியிடம் வழங்கினா்.
துணை செயல் அதிகாரி வரலட்சுமி, கண்காணிப்பாளா், ராஜ்குமாா், கோயில் ஆய்வாளா், சிவபிரசாத் மற்றும் பக்தா்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.