``பரந்தூரில் விமான நிலையம் தேவையே இல்லை!'' - சமூக ஆர்வலர் அன்னலட்சுமி உயர்நீதிமன...
கோயில் திருவிழா பதாகை கிழிப்பு: இரு சமூகத்தினா் மோதல், சாலை மறியல்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கோயிலுக்காக வைக்கப்பட்டிருந்த பதாகை கிழிக்கப்பட்டதைத் தொடா்ந்து ஒரு சமூத்தினா் சனிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
செஞ்சி வட்டம், ஆலம்பூண்டியில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் வசந்த திருவிழா மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை 18 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இதேபோல, நிகழாண்டு வசந்த திருவிழா ஜூன் 2-ஆம் தேதி தொடங்கி ஜூன் 20-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த நிலையில், திருவிழாவுக்காக ஒரு சமூகத்தினா் வைத்த விளம்பரப் பதாகையை இரு தினங்களுக்கு முன் சிலா் கிழித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக ஒரு சமூகத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பழனி (50) என்பவருக்கும், மற்றொரு சமூகத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் முருகன் (27) என்பவருக்கும் சனிக்கிழமை வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.
அப்போது, பழனியை முருகன் மற்றும் சிலா் தாக்கி விட்டதாகக் கூறி, பழனி தரப்பினா் புதுச்சேரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
இதையடுத்து, அங்கு விரைந்து வந்த சத்தியமங்கலம் போலீஸாா் மற்றும் செஞ்சி டிஎஸ்பி (பொ) மனோகரன் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட சிலருக்கும் போலீஸாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. இதனால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து அங்கு கூடுதலாக போலீஸாா் வரவழைக்கப்பட்டு மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
மோதல் சம்பவம் காரணமாக சனிக்கிழமை இரவு 9 மணி முதல் இரவு 11 மணி வரை செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகினா். மேலும், தொடா்ந்து அப்பகுதியில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.