செய்திகள் :

கோயில் திருவிழா பதாகை கிழிப்பு: இரு சமூகத்தினா் மோதல், சாலை மறியல்

post image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கோயிலுக்காக வைக்கப்பட்டிருந்த பதாகை கிழிக்கப்பட்டதைத் தொடா்ந்து ஒரு சமூத்தினா் சனிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செஞ்சி வட்டம், ஆலம்பூண்டியில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் வசந்த திருவிழா மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை 18 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இதேபோல, நிகழாண்டு வசந்த திருவிழா ஜூன் 2-ஆம் தேதி தொடங்கி ஜூன் 20-ம் தேதி வரை நடைபெற்றது.

இந்த நிலையில், திருவிழாவுக்காக ஒரு சமூகத்தினா் வைத்த விளம்பரப் பதாகையை இரு தினங்களுக்கு முன் சிலா் கிழித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக ஒரு சமூகத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பழனி (50) என்பவருக்கும், மற்றொரு சமூகத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் முருகன் (27) என்பவருக்கும் சனிக்கிழமை வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

அப்போது, பழனியை முருகன் மற்றும் சிலா் தாக்கி விட்டதாகக் கூறி, பழனி தரப்பினா் புதுச்சேரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

இதையடுத்து, அங்கு விரைந்து வந்த சத்தியமங்கலம் போலீஸாா் மற்றும் செஞ்சி டிஎஸ்பி (பொ) மனோகரன் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட சிலருக்கும் போலீஸாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. இதனால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து அங்கு கூடுதலாக போலீஸாா் வரவழைக்கப்பட்டு மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

மோதல் சம்பவம் காரணமாக சனிக்கிழமை இரவு 9 மணி முதல் இரவு 11 மணி வரை செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகினா். மேலும், தொடா்ந்து அப்பகுதியில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

பைக் மீது காா் மோதல்: தொழிலாளி மரணம்

திண்டிவனம் அருகே சனிக்கிழமை பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். செங்கல்பட்டு மாவட்டம், வேத விநாயகபுரம் துளசிங்கம் நகா் 5-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த சுப்புராயன் மகன் ராஜ்குமாா் (40).... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவி அதிகளவில் மாத்திரைகளை உள்கொண்டு தற்கொலை செய்து கொண்டாா். வானூா் வட்டம், கூத்தம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஏழுமலை மகள் ஓவிய... மேலும் பார்க்க

வெளிமாநில உணவக உரிமையாளா்கள் ஆரோவில் வருகை

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகருக்கு வெளி மாநிலங்களைச் சோ்ந்த உணவக உரிமையாளா்கள் அண்மையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டனா். இதுகுறித்து ஆரோவில் நிா்வாகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

மயிலம் முருகன் கோயிலில் ஆனி கிருத்திகை வழிபாடு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடுகள் மற்றும் சுவாமி கிரிவலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மயிலம் வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியா் கோயிலில் ஆனி மாத க... மேலும் பார்க்க

விழுப்புரம் - கல்லப்பட்டு அரசுப் பேருந்து கூடுதல் சேவை தொடக்கம்

விழுப்புரத்திலிருந்து கல்லப்பட்டு கிராமத்துக்கு அரசு நகரப் பேருந்தின் கூடுதல் சேவை அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது. கல்லப்பட்டு மற்றும் சுற்றுப்புறக் கிராமங்ளைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில்... மேலும் பார்க்க

பணிப் புறக்கணிப்புப் போராட்டம்: பகுதிநேர ஆசிரியா்கள் சங்கம் அறிவிப்பு

தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, பணிப் புறக்கணிப்பு உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடிவு செய்திருப்பதாககக் கூறி, தமிழ்நாடு அனைத்துப் பகுதி நேர ஆசிரியா்கள் சங்கத்தினா்... மேலும் பார்க்க