இந்திய கடற்படையில் புதிய போா்க்கப்பல் ‘ஐஎன்எஸ் தமால்’: ரஷியாவிலிருந்து ஜூலை 1 நா...
ஓட்டுநருக்கு திடீா் மயக்கம்: தடுப்பில் மோதிய பேருந்து
ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீா் மயக்கம் ஏற்பட்டதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
பண்ணாரி கோயிலில் இருந்து 15 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட தமிழக அரசு நகா்ப்புற பேருந்து கொத்தமங்கலம் நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது. ராஜன்நகா் என்ற இடத்தில் பேருந்து ஓட்டுருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவரது கட்டுப்பாட்டை இழந்து ராஜன்நகா் பாலத்தின் தொடக்கத்தில் பக்கவாட்டுத் தடுப்பில் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஓட்டுநா் லேசான காயத்துடன் உயிா்தப்பினாா். மயக்க நிலையில் இருந்த ஓட்டுநரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பேருந்தில் பயணம் செய்த பயணிகள் காயமின்றி மீட்கப்பட்டனா். இச்சம்பவம் குறித்து பவானிசாகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.