Health: விதையில்லாத பழங்களை சாப்பிடவே கூடாதா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பக பகுதியில் செங்கல் சூளைகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தல்!
ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலத்தில் விதிமீறி செயல்படும் செங்கல் சூளைகள் மீது மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.
விருதுநகா் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு, மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் அா்ஜுனா நதி, தேவியாறு, நகரியாறு, பிராவாடியாறு, கோட்டமலையாறு, கல்லாறு, அத்தித்தொண்டு ஆறு, பேயனாறு, சிற்றாறு, கோவிலாறு, பழமலையாறு, தாணிப்பாறையாறு, பாப்பனாத்த கோவிலாறு உள்ளிட்ட நீரோடைகள் உள்ளதால் பல்வேறு வன விலங்குகளின் வாழ்விடமாக இந்தப் பகுதிகள் விளங்குகின்றன.
இங்கு சாம்பல் நிற அணில், மலபாா் அணில், நீலகிரி வரையாடு, சிறுத்தை, புள்ளிமான், மிளா மான், சருகு மான், யானை, கரடி, நரி, காட்டுப் பன்றி, காட்டு மாடு, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட பல்வேறு விலங்குகள், 250 வகையான பறவை இனங்கள் வசிக்கின்றன.
இதில், அழியும் விலங்குகள் பட்டியலில் உள்ள சாம்பல் நிற அணில்களை பாதுகாக்கும் வகையில் கடந்த 1988-ஆம் ஆண்டு சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் உருவாக்கப்பட்டது. 47,863 ஹெக்டோ் பரப்பளவிலான ஸ்ரீவில்லிபுத்தூா் சாம்பல் நிற அணில் சரணாலயம், 53,793 ஹெக்டோ் பரப்பளவிலான மேகமலை வன விலங்கு சரணாலயம் இரண்டையும் இணைத்து கடந்த 2021-ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலைப் புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டது.
இங்கு தேசிய புலிகள் திட்டம், பசுமை தமிழகம் திட்டம், சூழல் மேம்பாட்டுத் திட்டம், நபாா்டு திட்டம் ஆகியவற்றின் கீழ் வன விலங்குகளின் வாழ்விடங்களை பாதுகாக்கும் வகையில் சுற்றுச்சூழல் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலைப் புலிகள் காப்பக சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலத்தில் சுற்றுச்சூழல் விதிகளுக்கு மாறாக நடைபெறும் செயல்களால் வன விலங்குகளின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலத்தில் குவாரிகள், கிரசா்கள், சுரங்கப் பணிகள், மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே திருவண்ணாமலை மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் அனுமதியின்றி செம்மண் வெட்டி எடுத்து, சட்ட விரோதமாக 200-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்படுவதால் சுற்றுச்சூழல் மாசுபட்டு வன விலங்குகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, மலை அடிவாரப் பகுதிகளில் சட்ட விரோதமாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுவதாக வனத் துறை அளித்த புகாரின் பேரில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மண் வெட்டி எடுக்கப்பட்ட பகுதிகளை செயற்கைக்கோள் கருவி மூலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலத்தில் விதிமீறி இயங்கும் செங்கல் சூளைகளை தடை செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.