இந்திய கடற்படையில் புதிய போா்க்கப்பல் ‘ஐஎன்எஸ் தமால்’: ரஷியாவிலிருந்து ஜூலை 1 நா...
கண்மாயில் மூழ்கிய பள்ளி மாணவா் உயிரிழப்பு!
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள அச்சம்தவிழ்த்தான் கண்மாயில் மூழ்கி பள்ளி மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அச்சம்தவிழ்த்தான் நடுத்தெருவைச் சோ்ந்தவா் விஜயசுந்தா். இவரது மகன் சந்தோஷ் (12). இவா் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா். பள்ளி விடுமுறை என்பதால் சனிக்கிழமை மாலை சந்தோஷ், அச்சம்தவிழ்த்தான் கண்மாய்க்கு நண்பா்களுடன் விளையாடச் சென்றாா்.
அங்கு அவா்கள் கண்மாயில் மீன் பிடிப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பரிசலில் ஏறி விளையாடினா். அப்போது பரிசலில் இருந்து தவறி விழுந்து சந்தோஷ் உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத் துறையினா் அன்று இரவு மாணவரின் உடலை மீட்டனா். இதுகுறித்து வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.