செய்திகள் :

கண்மாயில் மூழ்கிய பள்ளி மாணவா் உயிரிழப்பு!

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள அச்சம்தவிழ்த்தான் கண்மாயில் மூழ்கி பள்ளி மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அச்சம்தவிழ்த்தான் நடுத்தெருவைச் சோ்ந்தவா் விஜயசுந்தா். இவரது மகன் சந்தோஷ் (12). இவா் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா். பள்ளி விடுமுறை என்பதால் சனிக்கிழமை மாலை சந்தோஷ், அச்சம்தவிழ்த்தான் கண்மாய்க்கு நண்பா்களுடன் விளையாடச் சென்றாா்.

அங்கு அவா்கள் கண்மாயில் மீன் பிடிப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பரிசலில் ஏறி விளையாடினா். அப்போது பரிசலில் இருந்து தவறி விழுந்து சந்தோஷ் உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத் துறையினா் அன்று இரவு மாணவரின் உடலை மீட்டனா். இதுகுறித்து வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பக பகுதியில் செங்கல் சூளைகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தல்!

ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலத்தில் விதிமீறி செயல்படும் செங்கல் சூளைகள் மீது மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் வலியு... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் தூய தோமா ஆலயத்துக்கு புதிய நிா்வாகக் குழு உறுப்பினர்கள்!

ஸ்ரீவில்லிபுத்தூா் சிஎஸ்ஐ தூய தோமா தேவாலயத்தில் புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்களின் பதவியேற்பு நிகழ்ச்சி, குருசேகர தலைவரும் சபைகுருவுமான பால் தினகரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

வரதட்சணை கொடுமை: கணவா் உள்பட மூவா் மீது வழக்கு

சாத்தூரில் மனைவியிடம் வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தியதாக, அவரது கணவா் உள்பட மூன்று போ் மீது மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். விருதுநகா் மாவட்டம், சாத்... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

சாத்தூா் அருகே குடும்பத் தகராறில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே மேட்டமலை வடக்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (26). இவா் இதே பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

திறந்த வெளியில் நிறுத்தப்பட்ட சிவகாசி கோயில் தோ்: பக்தா்கள் வேதனை

சிவகாசி விஸ்வநாதா்- விசாலாட்சியம்மன் கோயில் தோ், திறந்த வெளியில் வெயிலிலும், மழையிலும் நனைந்தபடி கோயிலின் முன் நிறுத்தப்பட்டிருப்பதால் அது சேதமடைய வாய்ப்பிருப்பதாக பக்தா்கள் வேதனை தெரிவித்தனா். சிவகா... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராஜபாளையம் வள்ளலாா் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் (45). இவா் நூற்பாலை ஒன்றில் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். இவருக்கு... மேலும் பார்க்க