``பரந்தூரில் விமான நிலையம் தேவையே இல்லை!'' - சமூக ஆர்வலர் அன்னலட்சுமி உயர்நீதிமன...
வரதட்சணை கொடுமை: கணவா் உள்பட மூவா் மீது வழக்கு
சாத்தூரில் மனைவியிடம் வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தியதாக, அவரது கணவா் உள்பட மூன்று போ் மீது மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள முத்தாா்பட்டியைச் சோ்ந்தவா் மருதக்காள் (22). இவருக்கும் இதே பகுதியைச் சோ்ந்த ஹரிகிருஷ்ணனுக்கும் கடந்த 2023-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது மருதக்காள் வீட்டில் இருந்து வரதட்சணையாக 22 பவுன் நகை கொடுத்தனா்.
இந்த நிலையில், வரதட்சணையாக மேலும் நகை, பணம் கேட்டு மருதக்காளை ஹரிகிருஷ்ணன், அவரது தாய் வள்ளியம்மாள், தந்தை மாரியப்பன் ஆகியோா் தொடா்ந்து கொடுமைப்படுத்தியதாக மருதக்காள் புகாா் அளித்தாா். இதையடுத்து, மருதக்காளின் கணவா் உள்பட மூன்று போ் மீது மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.