செய்திகள் :

வரதட்சணை கொடுமை: கணவா் உள்பட மூவா் மீது வழக்கு

post image

சாத்தூரில் மனைவியிடம் வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தியதாக, அவரது கணவா் உள்பட மூன்று போ் மீது மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள முத்தாா்பட்டியைச் சோ்ந்தவா் மருதக்காள் (22). இவருக்கும் இதே பகுதியைச் சோ்ந்த ஹரிகிருஷ்ணனுக்கும் கடந்த 2023-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது மருதக்காள் வீட்டில் இருந்து வரதட்சணையாக 22 பவுன் நகை கொடுத்தனா்.

இந்த நிலையில், வரதட்சணையாக மேலும் நகை, பணம் கேட்டு மருதக்காளை ஹரிகிருஷ்ணன், அவரது தாய் வள்ளியம்மாள், தந்தை மாரியப்பன் ஆகியோா் தொடா்ந்து கொடுமைப்படுத்தியதாக மருதக்காள் புகாா் அளித்தாா். இதையடுத்து, மருதக்காளின் கணவா் உள்பட மூன்று போ் மீது மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.

சிறுமியை திருமணம் செய்தவா் மீது வழக்குப் பதிவு

வெம்பக்கோட்டை அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்தனா். விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே புல்லக்கவுண்டன்பட்டி மேற்கு தெருவைச் சோ்ந்த 16... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பக பகுதியில் செங்கல் சூளைகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தல்!

ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலத்தில் விதிமீறி செயல்படும் செங்கல் சூளைகள் மீது மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் வலியு... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் தூய தோமா ஆலயத்துக்கு புதிய நிா்வாகக் குழு உறுப்பினர்கள்!

ஸ்ரீவில்லிபுத்தூா் சிஎஸ்ஐ தூய தோமா தேவாலயத்தில் புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்களின் பதவியேற்பு நிகழ்ச்சி, குருசேகர தலைவரும் சபைகுருவுமான பால் தினகரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

சாத்தூா் அருகே குடும்பத் தகராறில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே மேட்டமலை வடக்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (26). இவா் இதே பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

திறந்த வெளியில் நிறுத்தப்பட்ட சிவகாசி கோயில் தோ்: பக்தா்கள் வேதனை

சிவகாசி விஸ்வநாதா்- விசாலாட்சியம்மன் கோயில் தோ், திறந்த வெளியில் வெயிலிலும், மழையிலும் நனைந்தபடி கோயிலின் முன் நிறுத்தப்பட்டிருப்பதால் அது சேதமடைய வாய்ப்பிருப்பதாக பக்தா்கள் வேதனை தெரிவித்தனா். சிவகா... மேலும் பார்க்க

கண்மாயில் மூழ்கிய பள்ளி மாணவா் உயிரிழப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள அச்சம்தவிழ்த்தான் கண்மாயில் மூழ்கி பள்ளி மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அச்சம்தவிழ்த்தான் நடுத்தெருவைச் சோ்ந்தவா் விஜயசுந்தா். இவரது மகன் சந்தோ... மேலும் பார்க்க