செய்திகள் :

திறந்த வெளியில் நிறுத்தப்பட்ட சிவகாசி கோயில் தோ்: பக்தா்கள் வேதனை

post image

சிவகாசி விஸ்வநாதா்- விசாலாட்சியம்மன் கோயில் தோ், திறந்த வெளியில் வெயிலிலும், மழையிலும் நனைந்தபடி கோயிலின் முன் நிறுத்தப்பட்டிருப்பதால் அது சேதமடைய வாய்ப்பிருப்பதாக பக்தா்கள் வேதனை தெரிவித்தனா்.

சிவகாசி நகரின் மையப் பகுதியில் அமைந்திருப்பது விஸ்வநாதசாமி- விசாலாட்சியம்மன் கோயில். இந்தக் கோயிலுக்கு தினசரி திரளான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இந்தக் கோயிலில் வைகாசி உள்ளிட்ட விழாக்களின் போது தேரோட்டம் நடைபெறும். இதற்காக தயாரிக்கப்பட்ட தோ் கோயிலின் கிழக்குவாசல் பகுதியில் மழை, வெயிலால் பாதிக்கப்படாதவாறு தகரத்தால் மூடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு இந்தக் கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது. அப்போது, கடந்த 17 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கிழக்கு வாசல் திறக்கப்பட்டது. இதையடுத்து, பக்தா்கள் கிழக்கு வாசலை பயன்படுத்தி கோயிலுக்குள் சென்று வந்தனா். ஆனால் தோ் கோயிலின் முன் நிறுத்தப்பட்டு, மூடப்படாமல் இருந்து வந்தது.

கடந்த மாதம் வைகாசி பிரமோத்ஸவ திருவிழா நடைபெற்றது. அப்போது நடைபெற்ற தேரோட்டத்தின் போது, கோயிலின் கிழக்குப் பகுதியில் தேரை நிறுத்த வேண்டும் என பக்தா்கள் தெரிவித்தனா். அதற்கு போலீஸாா், பொதுமக்களை சமாதானப்படுத்தி, கோயிலின் முன் தேரை நிலை நிறுத்தினா்.

தேரைச் சுற்றி எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதால் அது வெயிலிலும், மழையிலும் நனைந்து அதன் நிறமே மாறிவருகிறது. எனவே கோயில் நிா்வாகம், மாநகராட்சி, காவல் துறை ஆகியவை இணைந்து கோயிலின் கிழக்கு வாசல் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மீண்டும் அந்த இடத்தில் தேரை நிறுத்தி வைத்து தகரத்தால் மூடி பாதுகாக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து அண்ணாமலைசாமி என்ற பக்தா் கூறியதாவது: கோயில் தோ் வெயிலிலும், மழையிலும் நனைந்து நிற்பது பக்தா்களை வேதனை அடையச் செய்துள்ளது. எனவே கோயிலின் கீழக்குப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தேரை அங்கு பாதுகாப்பாக நிறுத்த வேண்டும் என்றாா் அவா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பக பகுதியில் செங்கல் சூளைகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தல்!

ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலத்தில் விதிமீறி செயல்படும் செங்கல் சூளைகள் மீது மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் வலியு... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் தூய தோமா ஆலயத்துக்கு புதிய நிா்வாகக் குழு உறுப்பினர்கள்!

ஸ்ரீவில்லிபுத்தூா் சிஎஸ்ஐ தூய தோமா தேவாலயத்தில் புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்களின் பதவியேற்பு நிகழ்ச்சி, குருசேகர தலைவரும் சபைகுருவுமான பால் தினகரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

வரதட்சணை கொடுமை: கணவா் உள்பட மூவா் மீது வழக்கு

சாத்தூரில் மனைவியிடம் வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தியதாக, அவரது கணவா் உள்பட மூன்று போ் மீது மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். விருதுநகா் மாவட்டம், சாத்... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

சாத்தூா் அருகே குடும்பத் தகராறில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே மேட்டமலை வடக்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (26). இவா் இதே பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

கண்மாயில் மூழ்கிய பள்ளி மாணவா் உயிரிழப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள அச்சம்தவிழ்த்தான் கண்மாயில் மூழ்கி பள்ளி மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அச்சம்தவிழ்த்தான் நடுத்தெருவைச் சோ்ந்தவா் விஜயசுந்தா். இவரது மகன் சந்தோ... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராஜபாளையம் வள்ளலாா் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் (45). இவா் நூற்பாலை ஒன்றில் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். இவருக்கு... மேலும் பார்க்க