வேறு சமூகத்தவரை திருமணம் செய்த பெண்; 40 பேர் மொட்டையடித்து `சடங்கு' செய்த கிராமம...
பழைய ஓய்வூதியத் திட்டம்: பரிந்துரைக் குழு பணிகள் குறித்து அரசு விளக்கமளிக்க அன்புமணி கோரிக்கை
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க அமைக்கப்பட்ட ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழு இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தமிழக அரசால் அமைக்கப்பட்ட ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவின் பதவிக்காலத்தில் பாதிக்கும் மேல் முடிவடைந்து விட்ட நிலையில், அதன் பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியா்களில் 6,24,140 போ் புதிய ஓய்வூதியத் திட்டத்தில்தான் சோ்க்கப்பட்டுள்ளனா். புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சோ்ந்து இதுவரை ஓய்வு பெற்ற 49,912 பேருக்கு சராசரியாக ரூ.10 லட்சம் வீதம் ரூ.4,381 கோடி வழங்கப்பட்டதே தவிர, வேறு எந்த பயன்களும் இதுவரை வழங்கப்படவில்லை.
ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்பட 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே, தமிழக அரசுக்கு மனமிருந்தால், அங்கு பழைய ஓய்வூதியத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை ஒரு வாரத்தில் அறிந்து தமிழகத்திலும் செயல்படுத்த முடியும் என்று அன்புமணி தெரிவித்துள்ளாா்.