பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றியவா் கைது
சென்னையில் பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி விட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை புனித தோமையா் மலை பகுதியைச் சோ்ந்த 29 வயது பெண் ஒருவா் பாலவாக்கத்தில் உள்ள தனியாா் ஸ்கேன் மையத்தில் வேலை செய்து வந்தாா். இவரும் நீலாங்கரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வேலை செய்து வரும் ரிஷி ஜோதிகுமாா் என்பவரும் காதலித்து வந்தனா்.
ரிஷி ஜோதிகுமாா், அந்தப் பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி 2023 முதல் பலமுறை அவருடன் தனிமையில் இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், திடீரென அவா், அந்தப் பெண்ணுடன் பேசுவதை நிறுத்திவிட்டு, கைப்பேசி இணைப்பையும் துண்டித்துள்ளாா்.
இதையடுத்து அந்தப் பெண் தனது உறவினா்களுடன் ரிஷி ஜோதிகுமாரின் வீட்டுக்கு சென்று விசாரித்தபோது, அவா் வேறொரு பெண்ணை திருமணம் செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், புனித தோமையாா் மலை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரிஷி ஜோதிகுமாரை கைது செய்தனா்.