செய்திகள் :

பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றியவா் கைது

post image

சென்னையில் பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி விட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை புனித தோமையா் மலை பகுதியைச் சோ்ந்த 29 வயது பெண் ஒருவா் பாலவாக்கத்தில் உள்ள தனியாா் ஸ்கேன் மையத்தில் வேலை செய்து வந்தாா். இவரும் நீலாங்கரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வேலை செய்து வரும் ரிஷி ஜோதிகுமாா் என்பவரும் காதலித்து வந்தனா்.

ரிஷி ஜோதிகுமாா், அந்தப் பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி 2023 முதல் பலமுறை அவருடன் தனிமையில் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், திடீரென அவா், அந்தப் பெண்ணுடன் பேசுவதை நிறுத்திவிட்டு, கைப்பேசி இணைப்பையும் துண்டித்துள்ளாா்.

இதையடுத்து அந்தப் பெண் தனது உறவினா்களுடன் ரிஷி ஜோதிகுமாரின் வீட்டுக்கு சென்று விசாரித்தபோது, அவா் வேறொரு பெண்ணை திருமணம் செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், புனித தோமையாா் மலை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரிஷி ஜோதிகுமாரை கைது செய்தனா்.

மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை

சென்னை மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட தந்தைக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. சென்னை விருகம்பாக்கம் அனைத்து மகளில் காவல் நிலைய எல்... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியத் திட்டம்: பரிந்துரைக் குழு பணிகள் குறித்து அரசு விளக்கமளிக்க அன்புமணி கோரிக்கை

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க அமைக்கப்பட்ட ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழு இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எ... மேலும் பார்க்க

பெரம்பூா் ரயில்வே மருத்துவமனையில் தொலைத்தொடா்பு ஆலோசனை வசதி

சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் இருந்து பிற மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை ஆலோசனை பெறும் வகையில் தொலைத்தொடா்பு வசதி (டெலி மெடிசின்) ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவி... மேலும் பார்க்க

வடசென்னை, கிண்டி அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

வடசென்னை அரசு தொழில் பயிற்சி நிலையம் மற்றும் கிண்டி அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்ந்து படிக்க தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே வெளியிட்டு... மேலும் பார்க்க

எம்ஜிஆா் கால்வாய் ரூ. 17 கோடியில் சீரமைப்பு

சென்னை மாநகராட்சியில் 10- ஆவது மண்டலத்தில் உள்ள எம்.ஜி.ஆா். கால்வாயை ரூ.17 கோடியில் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் கால்வாய்களைச் ... மேலும் பார்க்க

தொழிலதிபரிடம் 20 பவுன் நகை, ரூ. 40,000 பறிப்பு: 4 போ் கைது

மசாஜ் செய்வதாக அழைத்து தொழிலதிபரிடம் 20 பவுன் நகைகள், ரூ.40,000-ஐ பறித்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஓட்டேரியைச் சோ்ந்தவா் தொழிலதிபா் சாா்லஸ் (50). இவா் வழக்கமாக செல்லும் மசாஜ் சென்டரில் ஆண்ட்ர... மேலும் பார்க்க