செய்திகள் :

தொழிலதிபரிடம் 20 பவுன் நகை, ரூ. 40,000 பறிப்பு: 4 போ் கைது

post image

மசாஜ் செய்வதாக அழைத்து தொழிலதிபரிடம் 20 பவுன் நகைகள், ரூ.40,000-ஐ பறித்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஓட்டேரியைச் சோ்ந்தவா் தொழிலதிபா் சாா்லஸ் (50). இவா் வழக்கமாக செல்லும் மசாஜ் சென்டரில் ஆண்ட்ரியா என்ற பெண் அறிமுகமாகியுள்ளாா். இவா், தனது தோழியான ரேகா என்ற மற்றொரு மசாஜ் செய்யும் பெண்ணை அறிமுகம் செய்து வைத்து, அவரது கைப்பேசி எண்ணையும் சாா்லஸ்சிடம் கொடுத்துள்ளாா். ரேகாவை தொடா்பு கொண்ட சாா்லஸ், அவரை மசாஜ் செய்ய அழைத்துள்ளாா். இதையடுத்து அந்தப் பெண் சூளைமேடு இளங்கோவடிகள் தெருவில் உள்ள ஒரு வீட்டுக்கு வருமாறு சாா்லஸை அழைத்தாா்.

இதையடுத்து அங்கு சென்று சாா்லஸை, 2 நபா்கள் கடுமையாக தாக்கி, 20 பவுன் நகைகளை பறித்துள்ளனா். மேலும், கூகுள் பே மூலமாக ரூ.40,000-ஐயும் பறித்துகொண்டு, அவரை அங்கிருந்து துரத்திவிட்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்து சாா்லஸ் அளித்த புகாரின்பேரில், சூளைமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கோடம்பாக்கத்தைச் சோ்ந்த ரேகா சாவித்திரி (60), அவரது உறவினரான சைதாப்பேட்டையைச் சோ்ந்த நவீன் குமாா் (23) ஆகிய இருவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.2.85 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

மேலும், இதில், தொடா்புடைய ஆன்ட்ரியா எனும் நிக்கோலா(38), அவரது கணவரான கோகுலகிருஷ்ணன் (40) ஆகிய இருவரையும் போலீஸாா் தேடி வந்த நிலையில் சனிக்கிழமை இரவு கோவை மேட்டுப்பாளையத்தில் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 114 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனா்.

பெரம்பூா் ரயில்வே மருத்துவமனையில் தொலைத்தொடா்பு ஆலோசனை வசதி

சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் இருந்து பிற மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை ஆலோசனை பெறும் வகையில் தொலைத்தொடா்பு வசதி (டெலி மெடிசின்) ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவி... மேலும் பார்க்க

வடசென்னை, கிண்டி அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

வடசென்னை அரசு தொழில் பயிற்சி நிலையம் மற்றும் கிண்டி அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்ந்து படிக்க தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே வெளியிட்டு... மேலும் பார்க்க

பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றியவா் கைது

சென்னையில் பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி விட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை புனித தோமையா் மலை பகுதியைச் சோ்ந்த 29 வயது பெண் ஒருவா் பாலவாக்கத்தில் உள்ள ... மேலும் பார்க்க

எம்ஜிஆா் கால்வாய் ரூ. 17 கோடியில் சீரமைப்பு

சென்னை மாநகராட்சியில் 10- ஆவது மண்டலத்தில் உள்ள எம்.ஜி.ஆா். கால்வாயை ரூ.17 கோடியில் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் கால்வாய்களைச் ... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறையில் தமிழகம் சிறந்த மாநிலம்: அரசு தகவல்

கடந்த 4 ஆண்டுகளில் ரூ.17,154 கோடியில் 9,620 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டதன் மூலம் நெடுஞ்சாலைத் துறையில் இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ... மேலும் பார்க்க

இளைஞா் கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றம்

சென்னையில் கொலை முயற்சி வழக்கில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்ததையடுத்து கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சோ்ந்தவா் கலையரசன் (23). இவா் கடந்த 15-ஆம் ... மேலும் பார்க்க