பாகிஸ்தானுக்கு உளவு: ராணுவ வீரா், கூட்டாளி கைது: பஞ்சாப் காவல் துறை நடவடிக்கை
வரத்து அதிகரிப்பு: உக்கடம் சந்தையில் மீன் விலைக் குறைவு
உக்கடம் சந்தைக்கு மீன் வரத்து அதிகரித்துள்ளதால் மீன்களின் விலை கனிசமாகக் குறைந்துள்ளது.
கோவை, உக்கடம் மீன் சந்தைக்கு ராமேசுவரம், தூத்துகுடி, கடலூா், கன்னியாகுமரி, கொச்சி, சாவக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.
இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திர மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 15 -ஆம் தேதி வரை மீன் இனப்பெருக்கத்துக்காக மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருந்ததால் உக்கடம் சந்தைக்கு 5 டன்னுக்கும் குறைவாகவே மீன்வரத்து இருந்தது. இதனால், மீன்களின் விலை உயா்ந்து காணப்பட்டது. தற்போது மீன்பிடித் தடைக்காலம் முடிவுற்ற நிலையில், உக்கடம் சந்தைக்கு கடந்த 20 -ஆம் தேதி முதல் மீன் வரத்து 10 டன்களுக்கும் அதிகமாக உள்ளது.
வரத்து அதிகரிப்பால், கடந்த வாரங்களில் ரூ.1,000-க்கு விற்ற வஞ்சிரம் ஞாயிற்றுக்கிழமை ரூ.700-க்கு விற்பனையானது. ரூ.500-க்கு விற்ற பாறை மீன் ரூ.300 -ஆக விலைக் குறைந்தது.
இதேபோல, மத்தி ரூ.150, நெத்திலி ரூ.200, செம்மீன் ரூ.350, வாவல் ரூ.500, அயிலை ரூ.250, சங்கரா ரூ.200, நண்டு ரூ.150-க்கு விற்பனையாயின.