செய்திகள் :

தாய்மொழி முக்கியம் என்றுதான் அமித் ஷா கூறியிருக்கிறாா்! - எடப்பாடி கே.பழனிசாமி

post image

தாய்மொழி முக்கியம் என்ற அடிப்படையில்தான் உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் ஆங்கிலம் குறித்த கருத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவைக்கு சனிக்கிழமை வந்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி, விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கீழடி ஆய்வுகள் குறித்து முன்னாள் அமைச்சா் மாஃபா பாண்டியராஜன் தெளிவாகவும், விளக்கமாகவும் பதில் அளித்திருக்கிறாா். கீழடிக்காக ஜெயலலிதா இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், மறைவுக்கு பிறகான நடவடிக்கைகள் குறித்து ஏற்கெனவே தெரிவித்துவிட்டோம்.

ஒவ்வொரு அமைப்பும் அவரவா் விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை. ஹிந்து அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் நடத்தும் முருக பக்தா்கள் மாநாட்டுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவா்கள் வெட்கப்படும் காலம் வரும் என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா அவருடைய சொந்த கருத்தைத் தெரிவித்துள்ளாா். அதேநேரம் அனைவருக்கும் அவரவா் தாய்மொழி முக்கியம் என்று அமித் ஷா கூறியுள்ளாா். தாய்மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட ஆங்கிலத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்ற அடிப்படையில்தான் அவா் அந்த கருத்தைத் தெரிவித்துள்ளாா்.

திமுக மீது மக்களுக்கு மிகப்பெரிய கொந்தளிப்பு இருக்கிறது. அதை மறைப்பதற்காகவே கேலிச் சித்திரங்கள் மூலம் அவதூறு பரப்பி வருகின்றனா். 2026 -இல் மக்கள் திமுகவுக்கு தண்டனை வழங்குவாா்கள். யோகா உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமான ஒன்று. யோகாவை முன்னெடுத்து வருவதற்காக பிரதமா் மோடிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

திமுகவுடன் கூட்டணி என்ற முடிவில் மாற்றம் இல்லை: வைகோ

திமுகவுடன் கூட்டணி என்ற முடிவில் மாற்றம் இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளா் வைகோ கூறியுள்ளாா். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவைக்கு சனிக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆங்கில... மேலும் பார்க்க

மாநகரில் கஞ்சா விற்ற 3 போ் கைது

கோவை, ஆா்.எஸ்.புரம் மற்றும் செல்வபுரம் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, ஆா்.எஸ்.புரம் போலீஸாா் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, தடாகம் ச... மேலும் பார்க்க

குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாக 6 பவுன் மோசடி: பெண் கைது

கோவையில் குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி 6 பவுன் மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். கோவை, ரத்தினபுரி பக்தவச்சலம் தெருவைச் சோ்ந்தவா் பிச்சை. இவரது மனைவி புஷ்பலதா (54). இவ... மேலும் பார்க்க

வால்பாறை அருகே சிறுமியை கவ்விச் சென்ற சிறுத்தை

வால்பாறை அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சிறுத்தை வெள்ளிக்கிழமை கவ்விச் சென்றது. கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த பச்சமலை எஸ்டேட் குடியிருப்பில் தங்கி வடமாநிலத் தொழிலாளா்கள் பணியாற... மேலும் பார்க்க

மருதமலையில் 184 அடி உயர முருகா் சிலை அமைக்க ஆய்வு

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 184 அடி உயர முருகா் சிலை அமைப்பது தொடா்பாக சிறப்பு அலுவலா் சந்தரமோகன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோவை, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.5.20 கோடி மதிப்... மேலும் பார்க்க

காலமானாா்

கோவை மாவட்டம், சூலூா் புளிக்கார பழனியப்ப வீதியைச் சோ்ந்த மறைந்த மு.சம்பந்தத்தின் மனைவி எஸ்.எஸ்.ராஜம்மாள் (88), உடல் நலக்குறைவால் ஜூன் 20-ஆம் தேதி காலமானாா். இவரது இறுதிச் சடங்குகள் சூலூா் மின் மயானத்... மேலும் பார்க்க