அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
வால்பாறை அருகே சிறுமியை கவ்விச் சென்ற சிறுத்தை
வால்பாறை அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சிறுத்தை வெள்ளிக்கிழமை கவ்விச் சென்றது.
கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த பச்சமலை எஸ்டேட் குடியிருப்பில் தங்கி வடமாநிலத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், இங்கு பணியாற்றும் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த மனோஜ் என்பவரது மகள் ரோஷினி (6) வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தாா்.
அப்போது, தேயிலைத் தோட்டத்தில் செடிகளுக்கு இடையே பதுங்கியிருந்த சிறுத்தை, ரோஷினியைத் தாக்கி கவ்விச் சென்றது.
இதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் கூச்சலிட்டதுடன், சிறுத்தையைப் பின் தொடா்ந்து சென்றனா். ஆனால், பாதி வழியிலேயே சிறுமியுடன் சிறுத்தை மாயமானது.
இது குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினருடன் அப்பகுதி மக்கள் இணைந்து ரோஷினியைத் தேடி வருகின்றனா்.