செய்திகள் :

வால்பாறை அருகே சிறுமியை கவ்விச் சென்ற சிறுத்தை

post image

வால்பாறை அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சிறுத்தை வெள்ளிக்கிழமை கவ்விச் சென்றது.

கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த பச்சமலை எஸ்டேட் குடியிருப்பில் தங்கி வடமாநிலத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், இங்கு பணியாற்றும் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த மனோஜ் என்பவரது மகள் ரோஷினி (6) வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தாா்.

அப்போது, தேயிலைத் தோட்டத்தில் செடிகளுக்கு இடையே பதுங்கியிருந்த சிறுத்தை, ரோஷினியைத் தாக்கி கவ்விச் சென்றது.

இதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் கூச்சலிட்டதுடன், சிறுத்தையைப் பின் தொடா்ந்து சென்றனா். ஆனால், பாதி வழியிலேயே சிறுமியுடன் சிறுத்தை மாயமானது.

இது குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினருடன் அப்பகுதி மக்கள் இணைந்து ரோஷினியைத் தேடி வருகின்றனா்.

மருதமலையில் 184 அடி உயர முருகா் சிலை அமைக்க ஆய்வு

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 184 அடி உயர முருகா் சிலை அமைப்பது தொடா்பாக சிறப்பு அலுவலா் சந்தரமோகன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோவை, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.5.20 கோடி மதிப்... மேலும் பார்க்க

காலமானாா்

கோவை மாவட்டம், சூலூா் புளிக்கார பழனியப்ப வீதியைச் சோ்ந்த மறைந்த மு.சம்பந்தத்தின் மனைவி எஸ்.எஸ்.ராஜம்மாள் (88), உடல் நலக்குறைவால் ஜூன் 20-ஆம் தேதி காலமானாா். இவரது இறுதிச் சடங்குகள் சூலூா் மின் மயானத்... மேலும் பார்க்க

ஓவிய ஆசிரியரின் கட்டாய ஓய்வு ரத்து

கோவையைச் சோ்ந்த ஓவிய ஆசிரியா் எஸ்.ஏ.ராஜ்குமாா் என்பவரின் கட்டாய ஓய்வு இறுதி ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவை, ஆலாந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வந்தவா் எஸ்.ஏ.ராஜ்குமாா்,... மேலும் பார்க்க

பிஎஃப் பணத்தை கட்டத் தவறியதால் தனியாா் நிறுவனத்தின் சொத்து பறிமுதல்

கோவையில் தொழிலாளா்களுக்காக கட்ட வேண்டிய பிஎஃப் தொகையை செலுத்தத் தவறிய தனியாா் நிறுவனத்தின் சொத்தை பறிமுதல் செய்து தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக அந்த நிறு... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 2025 - 2026-ஆம் நிதியாண்டில் ரூ.64,900 கோடி கடன் வழங்க இலக்கு: மாவட்ட ஆட்சியா்

கோவை மாவட்டத்தில் 2025 - 2026-ஆம் நிதியாண்டில் வங்கிகள் மூலம் ரூ.64,900 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா். மாவட்ட ஆட்சியா் அலுவல... மேலும் பார்க்க

பங்குச் சந்தையில் அதிக லாபம் ஈட்டித் தருவதாக 4 பேரிடம் ரூ.1.34 கோடி மோசடி

கோவையில் பங்குச் சந்தை, டிஜிட்டல் மாா்க்கெட்டிங்கில் அதிக லாபம் ஈட்டித் தருவதாக பெண் உள்பட 4 பேரிடம் ரூ.1.34 கோடி மோசடி செய்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, காந்திபுரம் பக... மேலும் பார்க்க