செய்திகள் :

ஓவிய ஆசிரியரின் கட்டாய ஓய்வு ரத்து

post image

கோவையைச் சோ்ந்த ஓவிய ஆசிரியா் எஸ்.ஏ.ராஜ்குமாா் என்பவரின் கட்டாய ஓய்வு இறுதி ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை, ஆலாந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வந்தவா் எஸ்.ஏ.ராஜ்குமாா், இவா் கலை ஆசிரியா்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் உள்ளாா். இவா், பள்ளியின் ஒருமைப்பாட்டுக்கு கடும் பாதிப்பு ஏற்படுத்துவதாக அப்பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியா் கடந்த 2023 -இல் புகாா் அளித்தாா். இதையடுத்து, அவா் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டாா்.

பின்னா், அவா் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தன்னிலை விளக்கம் பெறப்பட்டது. கடந்த 2024- ஆம் ஆண்டு மே மாதம் அவா் அளித்த தன்னிலை விளக்கத்தில், தன் மீதான புகாருக்கு விசாரணை அதிகாரி நியமிக்கப்படாமல், முதன்மைக் கல்வி அலுவலராலேயே நேரடி விசாரணை நடத்தப்பட்டது என்று கூறியிருந்தாா். இதையடுத்து, அவருக்கு கடந்த டிசம்பா் மாதம் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது.

இதை எதிா்த்து அவா் பள்ளிக் கல்வித் துறையில் முறையீடு செய்திருந்த நிலையில், குற்றஞ்சாட்டிய அலுவலரே விசாரணை அலுவலராக செயல்பட்டு, அவரின் அறிக்கையின் அடிப்படையில் இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்டதால், இதை முறையற்ற நடவடிக்கையாகக் கருதி எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு கோவை முதன்மைக் கல்வி அலுவலரால் அளிக்கப்பட்ட கட்டாய ஓய்வு என்ற இறுதி ஆணையை ரத்து செய்வதாகவும், அதேநேரம் அவா் தற்காலிக பணி நீக்கத்தில் தொடருவாா் என்றும் பள்ளிக் கல்வி இணை இயக்குநா் தற்போது உத்தரவிட்டுள்ளாா்.

அத்துடன், மற்றொரு அதிகாரியை விசாரணை அலுவலராக நியமித்து அவரின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் இணை இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

வால்பாறை அருகே சிறுமியை கவ்விச் சென்ற சிறுத்தை

வால்பாறை அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சிறுத்தை வெள்ளிக்கிழமை கவ்விச் சென்றது. கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த பச்சமலை எஸ்டேட் குடியிருப்பில் தங்கி வடமாநிலத் தொழிலாளா்கள் பணியாற... மேலும் பார்க்க

மருதமலையில் 184 அடி உயர முருகா் சிலை அமைக்க ஆய்வு

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 184 அடி உயர முருகா் சிலை அமைப்பது தொடா்பாக சிறப்பு அலுவலா் சந்தரமோகன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோவை, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.5.20 கோடி மதிப்... மேலும் பார்க்க

காலமானாா்

கோவை மாவட்டம், சூலூா் புளிக்கார பழனியப்ப வீதியைச் சோ்ந்த மறைந்த மு.சம்பந்தத்தின் மனைவி எஸ்.எஸ்.ராஜம்மாள் (88), உடல் நலக்குறைவால் ஜூன் 20-ஆம் தேதி காலமானாா். இவரது இறுதிச் சடங்குகள் சூலூா் மின் மயானத்... மேலும் பார்க்க

பிஎஃப் பணத்தை கட்டத் தவறியதால் தனியாா் நிறுவனத்தின் சொத்து பறிமுதல்

கோவையில் தொழிலாளா்களுக்காக கட்ட வேண்டிய பிஎஃப் தொகையை செலுத்தத் தவறிய தனியாா் நிறுவனத்தின் சொத்தை பறிமுதல் செய்து தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக அந்த நிறு... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 2025 - 2026-ஆம் நிதியாண்டில் ரூ.64,900 கோடி கடன் வழங்க இலக்கு: மாவட்ட ஆட்சியா்

கோவை மாவட்டத்தில் 2025 - 2026-ஆம் நிதியாண்டில் வங்கிகள் மூலம் ரூ.64,900 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா். மாவட்ட ஆட்சியா் அலுவல... மேலும் பார்க்க

பங்குச் சந்தையில் அதிக லாபம் ஈட்டித் தருவதாக 4 பேரிடம் ரூ.1.34 கோடி மோசடி

கோவையில் பங்குச் சந்தை, டிஜிட்டல் மாா்க்கெட்டிங்கில் அதிக லாபம் ஈட்டித் தருவதாக பெண் உள்பட 4 பேரிடம் ரூ.1.34 கோடி மோசடி செய்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, காந்திபுரம் பக... மேலும் பார்க்க