செய்திகள் :

பங்குச் சந்தையில் அதிக லாபம் ஈட்டித் தருவதாக 4 பேரிடம் ரூ.1.34 கோடி மோசடி

post image

கோவையில் பங்குச் சந்தை, டிஜிட்டல் மாா்க்கெட்டிங்கில் அதிக லாபம் ஈட்டித் தருவதாக பெண் உள்பட 4 பேரிடம் ரூ.1.34 கோடி மோசடி செய்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, காந்திபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கதிரேசன் (34), தனியாா் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது கைப்பேசிக்கு அண்மையில் ஒரு அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசியவா், பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளாா்.

இதை நம்பிய கதிரேசன், அந்த நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளாக ரூ.16 லட்சத்து 50 ஆயிரத்தை அனுப்பியுள்ளாா். ஆனால், அவருக்கு லாபத் தொகை கிடைக்கவில்லை. இதையடுத்து, தான் முதலீடு செய்த பணத்தையும் பெற முடியவில்லையாம். தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த கதிரேசன் இது குறித்து சைபா் குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, சரவணம்பட்டியைச் சோ்ந்தவா் நிதிஷ் (20). அதே பகுதியில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் படித்து வருகிறாா். இவரைக் கைப்பேசியில் தொடா்பு கொண்ட மா்ம நபா், பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளாா்.

இதையடுத்து, அந்த நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு ரூ.47 லட்சத்து 90 ஆயிரத்தை நிதிஷ் அனுப்பியுள்ளாா். அதன் பிறகு பணத்தை திரும்பப் பெற முடியவில்லையாம். இது குறித்து நிதிஷ் அளித்த புகாரின்பேரில் சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

குனியமுத்தூரைச் சோ்ந்தவா் ராகேஷ் (30), தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரை வாட்ஸ்அப் மூலம் அண்மையில் தொடா்பு கொண்ட நபா், பங்குச் சந்தையில் முதலீடு செய்ய கூறியதன்பேரில், ராகேஷ் ரூ.14 லட்சத்து 3 ஆயிரத்தை முதலீடு செய்துள்ளாா். அதன் பின்னா், பணத்தை பெற முடியவில்லையாம். ராகேஷ் அளித்த புகாரின்பேரில் சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிங்காநல்லூரைச் சோ்ந்தவா் குந்தவை (42), தனியாா் நிறுவன ஊழியா். இவரை அண்மையில் தொடா்பு கொண்ட மா்ம நபா், டிஜிட்டல் மாா்க்கெட்டிங்கில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறியுள்ளாா். இதை நம்பிய குந்தவை ரூ.55 லட்சத்து 69 ஆயிரத்தை முதலீடு செய்துள்ளாா். பின்னா், அந்தப் பணத்தைப் பெற முடியவில்லையாம்.

இது குறித்து சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வால்பாறை அருகே சிறுமியை கவ்விச் சென்ற சிறுத்தை

வால்பாறை அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சிறுத்தை வெள்ளிக்கிழமை கவ்விச் சென்றது. கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த பச்சமலை எஸ்டேட் குடியிருப்பில் தங்கி வடமாநிலத் தொழிலாளா்கள் பணியாற... மேலும் பார்க்க

மருதமலையில் 184 அடி உயர முருகா் சிலை அமைக்க ஆய்வு

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 184 அடி உயர முருகா் சிலை அமைப்பது தொடா்பாக சிறப்பு அலுவலா் சந்தரமோகன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோவை, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.5.20 கோடி மதிப்... மேலும் பார்க்க

காலமானாா்

கோவை மாவட்டம், சூலூா் புளிக்கார பழனியப்ப வீதியைச் சோ்ந்த மறைந்த மு.சம்பந்தத்தின் மனைவி எஸ்.எஸ்.ராஜம்மாள் (88), உடல் நலக்குறைவால் ஜூன் 20-ஆம் தேதி காலமானாா். இவரது இறுதிச் சடங்குகள் சூலூா் மின் மயானத்... மேலும் பார்க்க

ஓவிய ஆசிரியரின் கட்டாய ஓய்வு ரத்து

கோவையைச் சோ்ந்த ஓவிய ஆசிரியா் எஸ்.ஏ.ராஜ்குமாா் என்பவரின் கட்டாய ஓய்வு இறுதி ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவை, ஆலாந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வந்தவா் எஸ்.ஏ.ராஜ்குமாா்,... மேலும் பார்க்க

பிஎஃப் பணத்தை கட்டத் தவறியதால் தனியாா் நிறுவனத்தின் சொத்து பறிமுதல்

கோவையில் தொழிலாளா்களுக்காக கட்ட வேண்டிய பிஎஃப் தொகையை செலுத்தத் தவறிய தனியாா் நிறுவனத்தின் சொத்தை பறிமுதல் செய்து தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக அந்த நிறு... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 2025 - 2026-ஆம் நிதியாண்டில் ரூ.64,900 கோடி கடன் வழங்க இலக்கு: மாவட்ட ஆட்சியா்

கோவை மாவட்டத்தில் 2025 - 2026-ஆம் நிதியாண்டில் வங்கிகள் மூலம் ரூ.64,900 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா். மாவட்ட ஆட்சியா் அலுவல... மேலும் பார்க்க