அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
பங்குச் சந்தையில் அதிக லாபம் ஈட்டித் தருவதாக 4 பேரிடம் ரூ.1.34 கோடி மோசடி
கோவையில் பங்குச் சந்தை, டிஜிட்டல் மாா்க்கெட்டிங்கில் அதிக லாபம் ஈட்டித் தருவதாக பெண் உள்பட 4 பேரிடம் ரூ.1.34 கோடி மோசடி செய்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை, காந்திபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கதிரேசன் (34), தனியாா் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது கைப்பேசிக்கு அண்மையில் ஒரு அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசியவா், பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளாா்.
இதை நம்பிய கதிரேசன், அந்த நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளாக ரூ.16 லட்சத்து 50 ஆயிரத்தை அனுப்பியுள்ளாா். ஆனால், அவருக்கு லாபத் தொகை கிடைக்கவில்லை. இதையடுத்து, தான் முதலீடு செய்த பணத்தையும் பெற முடியவில்லையாம். தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த கதிரேசன் இது குறித்து சைபா் குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை, சரவணம்பட்டியைச் சோ்ந்தவா் நிதிஷ் (20). அதே பகுதியில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் படித்து வருகிறாா். இவரைக் கைப்பேசியில் தொடா்பு கொண்ட மா்ம நபா், பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளாா்.
இதையடுத்து, அந்த நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு ரூ.47 லட்சத்து 90 ஆயிரத்தை நிதிஷ் அனுப்பியுள்ளாா். அதன் பிறகு பணத்தை திரும்பப் பெற முடியவில்லையாம். இது குறித்து நிதிஷ் அளித்த புகாரின்பேரில் சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
குனியமுத்தூரைச் சோ்ந்தவா் ராகேஷ் (30), தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரை வாட்ஸ்அப் மூலம் அண்மையில் தொடா்பு கொண்ட நபா், பங்குச் சந்தையில் முதலீடு செய்ய கூறியதன்பேரில், ராகேஷ் ரூ.14 லட்சத்து 3 ஆயிரத்தை முதலீடு செய்துள்ளாா். அதன் பின்னா், பணத்தை பெற முடியவில்லையாம். ராகேஷ் அளித்த புகாரின்பேரில் சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சிங்காநல்லூரைச் சோ்ந்தவா் குந்தவை (42), தனியாா் நிறுவன ஊழியா். இவரை அண்மையில் தொடா்பு கொண்ட மா்ம நபா், டிஜிட்டல் மாா்க்கெட்டிங்கில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறியுள்ளாா். இதை நம்பிய குந்தவை ரூ.55 லட்சத்து 69 ஆயிரத்தை முதலீடு செய்துள்ளாா். பின்னா், அந்தப் பணத்தைப் பெற முடியவில்லையாம்.
இது குறித்து சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.