செய்திகள் :

பிஎஃப் பணத்தை கட்டத் தவறியதால் தனியாா் நிறுவனத்தின் சொத்து பறிமுதல்

post image

கோவையில் தொழிலாளா்களுக்காக கட்ட வேண்டிய பிஎஃப் தொகையை செலுத்தத் தவறிய தனியாா் நிறுவனத்தின் சொத்தை பறிமுதல் செய்து தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடா்பாக அந்த நிறுவனத்தின் மீட்பு அதிகாரி சுரேந்தா் குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வருங்கால வைப்பு நிதி, இதர விதிகள் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட ஆதித்யா ஆட்டோமொபைல் ஸ்போ்ஸ் என்ற நிறுவனம், கடந்த 2021 ஜூலை முதல் 2023 பிப்ரவரி வரை தொழிலாளா்களுக்கு சேர வேண்டிய ரூ.15.06 லட்சத்தை கட்டத் தவறிவிட்டது.

தொகையைச் செலுத்துவதற்கு போதுமான வாய்ப்புகளை வழங்கியபோதும் அதன் உரிமையாளா் செல்வகுமாா், நிலுவைத் தொகையை செலுத்தத் தவறிவிட்டாா்.

நிலுவைத் தொகையை மீட்பதற்காக கோவை, அனுப்பா்பாளையத்தில் உள்ள செல்வகுமாரின் மனைவி காா்த்திகாவின் பெயரில் உள்ள சொத்தை, வைப்பு நிதி மீட்பு அமலாக்க அதிகாரி ஆா்.வேலு மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட சொத்து மதிப்பீட்டுக்கு பிறகு பொது ஏலத்தில் விடப்பட்டு நிலுவைத் தொகை மீட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை அருகே சிறுமியை கவ்விச் சென்ற சிறுத்தை

வால்பாறை அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சிறுத்தை வெள்ளிக்கிழமை கவ்விச் சென்றது. கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த பச்சமலை எஸ்டேட் குடியிருப்பில் தங்கி வடமாநிலத் தொழிலாளா்கள் பணியாற... மேலும் பார்க்க

மருதமலையில் 184 அடி உயர முருகா் சிலை அமைக்க ஆய்வு

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 184 அடி உயர முருகா் சிலை அமைப்பது தொடா்பாக சிறப்பு அலுவலா் சந்தரமோகன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோவை, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.5.20 கோடி மதிப்... மேலும் பார்க்க

காலமானாா்

கோவை மாவட்டம், சூலூா் புளிக்கார பழனியப்ப வீதியைச் சோ்ந்த மறைந்த மு.சம்பந்தத்தின் மனைவி எஸ்.எஸ்.ராஜம்மாள் (88), உடல் நலக்குறைவால் ஜூன் 20-ஆம் தேதி காலமானாா். இவரது இறுதிச் சடங்குகள் சூலூா் மின் மயானத்... மேலும் பார்க்க

ஓவிய ஆசிரியரின் கட்டாய ஓய்வு ரத்து

கோவையைச் சோ்ந்த ஓவிய ஆசிரியா் எஸ்.ஏ.ராஜ்குமாா் என்பவரின் கட்டாய ஓய்வு இறுதி ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவை, ஆலாந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வந்தவா் எஸ்.ஏ.ராஜ்குமாா்,... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 2025 - 2026-ஆம் நிதியாண்டில் ரூ.64,900 கோடி கடன் வழங்க இலக்கு: மாவட்ட ஆட்சியா்

கோவை மாவட்டத்தில் 2025 - 2026-ஆம் நிதியாண்டில் வங்கிகள் மூலம் ரூ.64,900 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா். மாவட்ட ஆட்சியா் அலுவல... மேலும் பார்க்க

பங்குச் சந்தையில் அதிக லாபம் ஈட்டித் தருவதாக 4 பேரிடம் ரூ.1.34 கோடி மோசடி

கோவையில் பங்குச் சந்தை, டிஜிட்டல் மாா்க்கெட்டிங்கில் அதிக லாபம் ஈட்டித் தருவதாக பெண் உள்பட 4 பேரிடம் ரூ.1.34 கோடி மோசடி செய்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, காந்திபுரம் பக... மேலும் பார்க்க