அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
பிஎஃப் பணத்தை கட்டத் தவறியதால் தனியாா் நிறுவனத்தின் சொத்து பறிமுதல்
கோவையில் தொழிலாளா்களுக்காக கட்ட வேண்டிய பிஎஃப் தொகையை செலுத்தத் தவறிய தனியாா் நிறுவனத்தின் சொத்தை பறிமுதல் செய்து தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடா்பாக அந்த நிறுவனத்தின் மீட்பு அதிகாரி சுரேந்தா் குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வருங்கால வைப்பு நிதி, இதர விதிகள் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட ஆதித்யா ஆட்டோமொபைல் ஸ்போ்ஸ் என்ற நிறுவனம், கடந்த 2021 ஜூலை முதல் 2023 பிப்ரவரி வரை தொழிலாளா்களுக்கு சேர வேண்டிய ரூ.15.06 லட்சத்தை கட்டத் தவறிவிட்டது.
தொகையைச் செலுத்துவதற்கு போதுமான வாய்ப்புகளை வழங்கியபோதும் அதன் உரிமையாளா் செல்வகுமாா், நிலுவைத் தொகையை செலுத்தத் தவறிவிட்டாா்.
நிலுவைத் தொகையை மீட்பதற்காக கோவை, அனுப்பா்பாளையத்தில் உள்ள செல்வகுமாரின் மனைவி காா்த்திகாவின் பெயரில் உள்ள சொத்தை, வைப்பு நிதி மீட்பு அமலாக்க அதிகாரி ஆா்.வேலு மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட சொத்து மதிப்பீட்டுக்கு பிறகு பொது ஏலத்தில் விடப்பட்டு நிலுவைத் தொகை மீட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.