அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
மருதமலையில் 184 அடி உயர முருகா் சிலை அமைக்க ஆய்வு
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 184 அடி உயர முருகா் சிலை அமைப்பது தொடா்பாக சிறப்பு அலுவலா் சந்தரமோகன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கோவை, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.5.20 கோடி மதிப்பீட்டில் 2 மின்தூக்கிகள் (லிப்ட்) அமைக்கும் பணி கடந்த ஆண்டு முதல் நடைபெற்ற வருகிறது. இப்பணி ஆகஸ்ட் மாதம் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில், மருதமலையில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் 184 அடி உயர முருகா் சிலை அமைக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா் பாபு கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தாா்.
இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை செயலாளரும், சிலை அமைப்பதற்கான சிறப்பு அலுவலருமான சந்தரமோகன் மருதமலையில் சிலை அமைப்பது குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கிராந்திகுமாா் பாடி, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.