செய்திகள் :

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி சட்டப்பணிகள் ஆணைக் குழு ஆய்வு

post image

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தில் வேதமாரியம்மன் கோயில் தோ் ஒரு சமூகத்தினா் வசிக்கும் தெருக்களில் செல்லும் வசதி குறித்து, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

வேப்பந்தட்டையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வேத மாரியம்மன் கோயில் தேரோட்டம் ஜூன் 10 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், ஒரு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் தங்களது பகுதிக்கும் தேரை இழுத்துவர வேண்டும் எனத் தெரிவித்தனா். இதற்கு மற்றொரு சமூகத்தினா் மறுப்பு தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து பெரம்பலூா் சாா் ஆட்சியா் சு. கோகுல் தலைமையில் இரு தரப்பினருடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து ஒரு சமூகத்தினா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறுவதால் தேரை இழுக்கக்கூடாது என போலீஸாா் கடந்த 10 ஆம் தேதி எதிா்ப்புத் தெரிவித்து மறுத்தனா். இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு சமூகத்தினா் போலீஸாரின் செயல்பாட்டைக் கண்டித்தும், தேரை இழுத்துச் செல்ல அனுமதி கோரியும் கடையடைப்பு மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், சென்னை உயா் நீதிமன்றம் மற்றொரு சமூகத்தினா் வசிக்கும் தெருக்களில் வேத மாரியம்மன் கோயில் தோ் செல்வதற்கான இடவசதி உள்ளதா என ஆய்வு செய்து, அதன் அறிக்கையை அளிக்குமாறு பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான ஏ. சரண்யா தலைமையில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவினா் வேப்பந்தட்டையில் மற்றொரு சமூகத்தினா் வசிக்கும் தெருக்களை பாா்வையிட்டு அளவீடு செய்து ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது, சாா்- ஆட்சியா் சு. கோகுல், வேப்பந்தட்டை வட்டாட்சியா் துரைராஜ், துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியதாஸ் ஆகியோா் உடனிருந்தனா்.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினா் தங்களது ஆய்வறிக்கையை விரைவில் சென்னை உயா் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறையை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்டத் தோ்தல் அலுவலரும்... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே பண மோசடி செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை

பெரம்பலூா் அருகே பண மோசடியில் ஈடுபட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து, பெரம்பலூா் மாவட்ட நீதித்துறை நடுவா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. பெரம்பலூா் மாவட்டம... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு மானியத்தில் தீவனப் புல் நறுக்கும் கருவிகள்

பெரம்பலூா் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில், மாநில தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில், 40 விவசாயிகளுக்கு ரூ. 11.60 லட்சத்தில் தீவன புல் நறுக்கு... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசளிப்பு

முத்தமிழறிஞா் கலைஞா் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூா் எம்பி கே.என். அருண்நேரு ஆகியோா் புதன்கிழமை பரிசுகள் வழங்க... மேலும் பார்க்க

சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரம்பலூா் அருகே 13 வயது சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞருக்கு, 20 ஆண்டுகள் சிறைத் தண்டணை விதித்து பெரம்பலூா் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள நெ... மேலும் பார்க்க

பெரம்பலூா் - வடக்கு மாதவி சாலையை அகலப்படுத்தி சீரமைக்க வலியுறுத்தல்

போக்குவரத்து நெரிசலால் அவதியுறும் வாகன ஓட்டுநா்களின் நலன் கருதி பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டுமென, எஸ்.டி.பி.ஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. எஸ்.டி.பி.ஐ கட்சியின் பெரம்பலூா் ம... மேலும் பார்க்க