இந்தியாவுடன் போரை நிறுத்த வேண்டுகோள்! ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் துணை பிரதமர்!
விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசளிப்பு
முத்தமிழறிஞா் கலைஞா் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூா் எம்பி கே.என். அருண்நேரு ஆகியோா் புதன்கிழமை பரிசுகள் வழங்கிப் பாராட்டினா்.
கலைஞா் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெரம்பலூா் மாவட்டத்தில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான 35 வயதுக்குள்பட்ட பொதுப் பிரிவு ஆண்களுக்கான கபடி, கையுந்து பந்து மற்றும் கால்பந்து போட்டிகளில், கபடி பிரிவில் முதலிடம் வென்ற பூலாம்பாடி தீரன் அணியினருக்கு ரூ. 30 ஆயிரமும், 2-ஆவது இடம் வென்ற க.எறையூா் அணியினருக்கு ரூ. 24 ஆயிரமும், 3-ஆவது இடம் வென்ற அம்மாபாளையம் சஹாரா அணியினருக்கு ரூ.15 ஆயிரமும்,
கையுந்துப் பந்து போட்டியில் முதலிடம் வென்ற சு. ஆடுதுறை அணியினருக்கு ரூ. 30 ஆயிரமும், 2-ஆவது இடம் வென்ற திருமாந்துறை அணியினருக்கு ரூ.18 ஆயிரமும், 3-ஆவது இடம் வென்ற கொளக்காநத்தம் மணி பிரதா்ஸ் அணியினருக்கு ரூ. 12 ஆயிரத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.என். அருண்நேரு ஆகியோா் வழங்கி பாராட்டினா்.
இந்நிகழ்ச்சியில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் புவனேஸ்வரி, டேக்வோண்டோ பயிற்றுநா் பரணிதேவி, அட்மா தலைவா் வீ. ஜெகதீசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.