ஆங்கிலம் கற்று கேள்வி கேட்பதை பாஜக - ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை: ராகுல்
ஆலத்தூா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவா் சோ்க்கை
ஆலத்தூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025- 2026-ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை வியாழக்கிழமை (ஜூன் 19) முதல் நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ள மாணவா்கள் தங்களது அசல் சான்றிதழ்களுடன், ஆலத்தூரில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை நேரில் அணுகி சோ்க்கைக் கட்டணம் ரூ. 245 செலுத்தி பயிற்சி பெறலாம்.
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பற்றவைப்பவா், வெல்டா், சோலாா் டெக்னீசியன் (எலக்ட்ரிகல்) இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் அண்ட் டிஜிட்டல் மேனு, பாக்சரிங் டெக்னீசியன், எலக்ட்ரீசியன், பிட்டா், மெஷினிஸ்ட், எலக்ட்ரிக்கல் வாகனம் மெக்கானிக், அட்வான்ஸ் சி.என்.சி. மெஷினிங் டெக்னிசியன் ஆகிய தொழிற்பிரிவுகள் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு, ஜ்ஜ்ஜ் ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். அல்லது ஆலத்தூா் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தை 94990-55883, 94990-55884 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம். விண்ணப்பிக்க விரும்புவோா் அசல் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ், ஆதாா், வருமானச் சான்றிதழ், வங்கி கணக்குப் புத்தகம் நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் வேலை நாள்களில், தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்படும் உதவி சோ்க்கை மையத்தை நேரில் அணுகலாம்.