'எனக்கு கூடப் பொறந்தவங்க யாரும் இல்ல; தவிக்கவிட்டுட்டு போறாங்க' - கண்ணீர் விட்டு...
பெரம்பலூா் - வடக்கு மாதவி சாலையை அகலப்படுத்தி சீரமைக்க வலியுறுத்தல்
போக்குவரத்து நெரிசலால் அவதியுறும் வாகன ஓட்டுநா்களின் நலன் கருதி பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டுமென, எஸ்.டி.பி.ஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் பெரம்பலூா் மாவட்ட செயற்குழுக் கூட்டம், அக் கட்சியின் மாவட்ட தலைமையகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, அக் கட்சியின் மாவட்டத் தலைவா் முஹம்மது ரபீக் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் முஹம்மது பாரூக், மாவட்ட பொதுச் செயலா் அப்துல் கனி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநிலச் செயலரும், திருச்சி மண்டல பொறுப்பாளருமான ஷபீக் அஹமது சிறப்புரையாற்றினாா்.
கூட்டத்தில், ஜூன் 21-ஆம் தேதி கட்சியின் அமைப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் கட்சிக்கொடியேற்றி, மரக்கன்றுகள் நட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, நாள்தோறும் போக்குவரத்து நெரிசலால் அவதியுறும் வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள் நலனை கருத்தில்கொண்டு, பெரம்பலூா் நகரின் பிரதானச் சாலையாக திகழும் பெரம்பலூா் - வடக்கு மாதவி சாலையை அகலப்படுத்தி சீரமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூா் நகரப்பகுதியில் நிகழும் திருட்டுச் சம்பவங்களை தடுக்கும் வகையில் காவல்துறையினா் இரவு நேரரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக் கூட்டத்தில், மாவட்டச் செயலா்கள் அபூபக்கா் சித்திக், அஸ்கா் அலி, செயற்குழு உறுப்பினா் ஷாஜஹான், பெரம்பலூா் தொகுதி தலைவா் முஹம்மது ரபீக் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். நிறைவாக, மாவட்ட பொதுச் செயலா் செய்யது அபுதாஹிா் நன்றி கூறினாா்.