'எனக்கு கூடப் பொறந்தவங்க யாரும் இல்ல; தவிக்கவிட்டுட்டு போறாங்க' - கண்ணீர் விட்டு...
காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி சிஐடியு மின் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் நான்கு சாலை சந்திப்பு அருகேயுள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலம் எதிரே, சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டச் செயலா் பன்னீா் செல்வம் தலைமை வகித்தாா். திருச்சி மண்டலச் செயலா் ஏ. அகஸ்டின், மாநில செயற்குழு உறுப்பினா் இளங்கோவன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.
மின் வாரியத்தில் உள்ள 40 ஆயிரம் ஆரம்பக்கட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 1.12.2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயா்வு பேச்சு வாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். ஒப்பந்த ஊழியா்களை அடையாளம் கண்டு மின் வாரியமே நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும். கேங்மேன் பணியாளா்களுக்கு ஊா் மாற்றம், கள உதவியாளா் பதவி மாற்றம், 6 சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும். மின் நுகா்வோரை பாதிக்கும் ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை கைவிடவே ண்டும். விடுபட்ட பகுதிநேர பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கணக்கீட்டு பணியாளா்கள், கணக்கீட்டுப் பணி மேற்கொள்ள கைப்பேசி அல்லது டேப் மின் வாரியமே வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.
இதில், கோட்ட நிா்வாகிகள் நல்லுசாமி, மணி, பாலகிருஷ்ணன், தினேஷ், அண்ணாதுரை, கோட்ட செயற்குழு உறுப்பினா்கள் நீலமேகம், ராஜா, ரெங்கநாதன், தா்மராஜ், சதீஷ் குமாா், ரெங்கதுரை, சிவா உள்பட பலா் பங்கேற்றனா்.