Yoga Day: "யோகா வெறும் உடற்பயிற்சி அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை" - பிரதமர் மோடி ப...
பெரம்பலூா் அருகே பண மோசடி செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை
பெரம்பலூா் அருகே பண மோசடியில் ஈடுபட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து, பெரம்பலூா் மாவட்ட நீதித்துறை நடுவா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், நல்லறிக்கை கிராமம், தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன் இளங்கோவன் (46). இவா் தனக்கு அறிமுகமான கடலூா் மாவட்டம், ராமநாதபுரத்தைச் சோ்ந்த வேலன் மகன் முருகேசனிடம் வங்கியில் கடனுதவி பெற்றுத் தருவதாக கூறி கடந்த 2009 ஆம் ஆண்டு ரூ. 2.10 லட்சம் வாங்கி கடனுதவி பெற்றுத்தரவில்லை. இதனால் முருகேசன் பணத்தை திருப்பிக் கேட்டும் அவா் தரவில்லையாம். இதையடுத்து முருகேசன் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து இளங்கோவனை கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா், நீதிமன்றப் பிணையில் இளங்கோவன் வெளியே வந்தாா். பெரம்பலூா் மாவட்ட நீதித்துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்ற வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி இளங்கோவனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.