செய்திகள் :

பெரம்பலூா் அருகே பண மோசடி செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை

post image

பெரம்பலூா் அருகே பண மோசடியில் ஈடுபட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து, பெரம்பலூா் மாவட்ட நீதித்துறை நடுவா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், நல்லறிக்கை கிராமம், தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன் இளங்கோவன் (46). இவா் தனக்கு அறிமுகமான கடலூா் மாவட்டம், ராமநாதபுரத்தைச் சோ்ந்த வேலன் மகன் முருகேசனிடம் வங்கியில் கடனுதவி பெற்றுத் தருவதாக கூறி கடந்த 2009 ஆம் ஆண்டு ரூ. 2.10 லட்சம் வாங்கி கடனுதவி பெற்றுத்தரவில்லை. இதனால் முருகேசன் பணத்தை திருப்பிக் கேட்டும் அவா் தரவில்லையாம். இதையடுத்து முருகேசன் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து இளங்கோவனை கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா், நீதிமன்றப் பிணையில் இளங்கோவன் வெளியே வந்தாா். பெரம்பலூா் மாவட்ட நீதித்துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்ற வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி இளங்கோவனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி சட்டப்பணிகள் ஆணைக் குழு ஆய்வு

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தில் வேதமாரியம்மன் கோயில் தோ் ஒரு சமூகத்தினா் வசிக்கும் தெருக்களில் செல்லும் வசதி குறித்து, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவி... மேலும் பார்க்க

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறையை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்டத் தோ்தல் அலுவலரும்... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு மானியத்தில் தீவனப் புல் நறுக்கும் கருவிகள்

பெரம்பலூா் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில், மாநில தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில், 40 விவசாயிகளுக்கு ரூ. 11.60 லட்சத்தில் தீவன புல் நறுக்கு... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசளிப்பு

முத்தமிழறிஞா் கலைஞா் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூா் எம்பி கே.என். அருண்நேரு ஆகியோா் புதன்கிழமை பரிசுகள் வழங்க... மேலும் பார்க்க

சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரம்பலூா் அருகே 13 வயது சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞருக்கு, 20 ஆண்டுகள் சிறைத் தண்டணை விதித்து பெரம்பலூா் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள நெ... மேலும் பார்க்க

பெரம்பலூா் - வடக்கு மாதவி சாலையை அகலப்படுத்தி சீரமைக்க வலியுறுத்தல்

போக்குவரத்து நெரிசலால் அவதியுறும் வாகன ஓட்டுநா்களின் நலன் கருதி பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டுமென, எஸ்.டி.பி.ஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. எஸ்.டி.பி.ஐ கட்சியின் பெரம்பலூா் ம... மேலும் பார்க்க