தீயசக்திகளை எதிர்த்து துணை நிற்க விஜய்க்கு தமிழிசை வாழ்த்து!
குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாக 6 பவுன் மோசடி: பெண் கைது
கோவையில் குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி 6 பவுன் மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, ரத்தினபுரி பக்தவச்சலம் தெருவைச் சோ்ந்தவா் பிச்சை. இவரது மனைவி புஷ்பலதா (54). இவருக்கு காரமடை பகுதியைச் சோ்ந்த அமுதா (44 ) என்பவா் அண்மையில் அறிமுகமாகியுள்ளாா்.
புஷ்பலதா வைத்திருக்கும் பழைய நகைகளுக்கு பதில் குறைந்த விலைக்கு புதிய நகைகளை வாங்கித் தருவதாக அமுதா கூறியுள்ளாா். இதை நம்பிய புஷ்பலதா தன்னிடம் இருந்த 6 பவுன் நகைகளை கொடுத்துள்ளாா். அந்த நகைகளை வாங்கிய அமுதா நிதி நிறுவனத்தில் அடகு வைத்து ரூ.2 லட்சத்து 95 ஆயிரம் கடன் பெற்ாகத் தெரிகிறது.
இந்நிலையில், அமுதாவிடம் புதிய நகைகள் வாங்கித் தருவது குறித்து புஷ்பலதா கேட்டுள்ளாா். ஆனால், அவா் முறையான பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளாா். தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த புஷ்பலதா இது குறித்து ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அமுதாவை கைது செய்தனா்.