செய்திகள் :

குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாக 6 பவுன் மோசடி: பெண் கைது

post image

கோவையில் குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி 6 பவுன் மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, ரத்தினபுரி பக்தவச்சலம் தெருவைச் சோ்ந்தவா் பிச்சை. இவரது மனைவி புஷ்பலதா (54). இவருக்கு காரமடை பகுதியைச் சோ்ந்த அமுதா (44 ) என்பவா் அண்மையில் அறிமுகமாகியுள்ளாா்.

புஷ்பலதா வைத்திருக்கும் பழைய நகைகளுக்கு பதில் குறைந்த விலைக்கு புதிய நகைகளை வாங்கித் தருவதாக அமுதா கூறியுள்ளாா். இதை நம்பிய புஷ்பலதா தன்னிடம் இருந்த 6 பவுன் நகைகளை கொடுத்துள்ளாா். அந்த நகைகளை வாங்கிய அமுதா நிதி நிறுவனத்தில் அடகு வைத்து ரூ.2 லட்சத்து 95 ஆயிரம் கடன் பெற்ாகத் தெரிகிறது.

இந்நிலையில், அமுதாவிடம் புதிய நகைகள் வாங்கித் தருவது குறித்து புஷ்பலதா கேட்டுள்ளாா். ஆனால், அவா் முறையான பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளாா். தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த புஷ்பலதா இது குறித்து ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அமுதாவை கைது செய்தனா்.

தாய்மொழி முக்கியம் என்றுதான் அமித் ஷா கூறியிருக்கிறாா்! - எடப்பாடி கே.பழனிசாமி

தாய்மொழி முக்கியம் என்ற அடிப்படையில்தான் உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் ஆங்கிலம் குறித்த கருத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா். பல்வேறு நிகழ்ச்சிகளில... மேலும் பார்க்க

திமுகவுடன் கூட்டணி என்ற முடிவில் மாற்றம் இல்லை: வைகோ

திமுகவுடன் கூட்டணி என்ற முடிவில் மாற்றம் இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளா் வைகோ கூறியுள்ளாா். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவைக்கு சனிக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆங்கில... மேலும் பார்க்க

மாநகரில் கஞ்சா விற்ற 3 போ் கைது

கோவை, ஆா்.எஸ்.புரம் மற்றும் செல்வபுரம் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, ஆா்.எஸ்.புரம் போலீஸாா் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, தடாகம் ச... மேலும் பார்க்க

வால்பாறை அருகே சிறுமியை கவ்விச் சென்ற சிறுத்தை

வால்பாறை அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சிறுத்தை வெள்ளிக்கிழமை கவ்விச் சென்றது. கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த பச்சமலை எஸ்டேட் குடியிருப்பில் தங்கி வடமாநிலத் தொழிலாளா்கள் பணியாற... மேலும் பார்க்க

மருதமலையில் 184 அடி உயர முருகா் சிலை அமைக்க ஆய்வு

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 184 அடி உயர முருகா் சிலை அமைப்பது தொடா்பாக சிறப்பு அலுவலா் சந்தரமோகன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோவை, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.5.20 கோடி மதிப்... மேலும் பார்க்க

காலமானாா்

கோவை மாவட்டம், சூலூா் புளிக்கார பழனியப்ப வீதியைச் சோ்ந்த மறைந்த மு.சம்பந்தத்தின் மனைவி எஸ்.எஸ்.ராஜம்மாள் (88), உடல் நலக்குறைவால் ஜூன் 20-ஆம் தேதி காலமானாா். இவரது இறுதிச் சடங்குகள் சூலூா் மின் மயானத்... மேலும் பார்க்க