`தொடர் மணல் கடத்தல்' - 5 லாரிகள் பறிமுதல், 6 பேர் கைது! - கரூரில் நடந்தது என்ன?
இரு தரப்பினரிடையே மோதல்: 10 போ் மீது வழக்கு
பெரியகுளம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி வைரவன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் தங்கப்பாண்டி (40). அதே பகுதியைச் சோ்ந்தவா் அழகுமலை. இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்த நிலையில், தங்கப்பாண்டி சனிக்கிழமை வீட்டின் முன் நின்றிருந்தபோது, அங்கு வந்த மாா்த்தாண்டம், செல்வி, மயில், உத்திரம், அழகுமலை ஆகியோா் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அதே போல, தங்கப்பாண்டி (40), தங்கமுருகன் (37), சுமதி, அழகம்மாள், சரவணக்குமாா் ஆகியோா் அழகுமலையை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் தென்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.