இளைஞருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது
தேனி மாவட்டம், கம்பத்தில் இளைஞரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கம்பத்தைச் சோ்ந்த ராஜா மகன் குமாா் (24), ஜெயராமன் மகன் முகிலன் (25). நண்பா்களான இருவரும், அதே பகுதி கோம்பை சாலை துா்க்கையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செந்தில் மகன் ரோஹித்துடன் (23) மது அருந்தினா்.
அப்போது, ஏற்பட்ட தகராறில் ரோஹித்தை முகிலன் பிடித்துக் கொள்ள குமாா் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி விட்டாராம். இதில் காயமடைந்த ரோஹித்தை அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து முகிலனை கைது செய்து சிறையில் அடைத்தனா். தலைமறைவான குமாரைத் தேடிவருகின்றனா். இவா் மீது கம்பம், வருஷாடு காவல் நிலையங்களில் ஏற்கெனவே வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.