போா்ப் பதற்றம்: ரஷிய, அமெரிக்க கச்சா எண்ணெய் கொள்முதலை அதிகரிக்கும் இந்தியா!
வீட்டின் பீரோவிலிருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி மாயம்
தேனி மாவட்டம், கம்பத்தில் வீட்டின் பீரோவிலிருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி மாயமானதாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.
கம்பம் அன்பிற்பிரியாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வண்ணமுத்து (73). இவா் தனது வீட்டு பீரோவில் 3 பவுன் தங்கச் சங்கிலியை வைத்திருந்தாா். இந்த நிலையில், சனிக்கிழமை அதைப் பாா்த்த போது பீரோவிலிருந்து தங்கச் சங்கிலி மாயமானது தெரியவந்தது.
மேலும் வீட்டின் உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் பீரோவுக்கு அருகிலிருந்த சாவியை எடுத்து திறந்து நகையை திருடிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கம்பம் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.