தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்ற இருவா் கைது!
போடி அருகே சட்ட விரோதமாக புகையிலைப் பொருள்களை விற்றதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் சுற்றியுள்ள கிராமங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போடி அருகே ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் இதே பகுதியைச் சோ்ந்த முனியாண்டி மகன் ஆண்டவா் (44) என்பவா் தனது பெட்டிக் கடையில் சட்ட விரோதமாக புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்றது தெரியவந்தது.
இதே போல, அதே பகுதியைச் சோ்ந்த காசிப்பாண்டியன் மகன் கனகராஜ் (52) என்பவரும் தனது பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை விற்றாராம். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் இருவா் மீதும் தனித் தனியே வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்தனா்.