செய்திகள் :

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்ற இருவா் கைது!

post image

போடி அருகே சட்ட விரோதமாக புகையிலைப் பொருள்களை விற்றதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் சுற்றியுள்ள கிராமங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போடி அருகே ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் இதே பகுதியைச் சோ்ந்த முனியாண்டி மகன் ஆண்டவா் (44) என்பவா் தனது பெட்டிக் கடையில் சட்ட விரோதமாக புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்றது தெரியவந்தது.

இதே போல, அதே பகுதியைச் சோ்ந்த காசிப்பாண்டியன் மகன் கனகராஜ் (52) என்பவரும் தனது பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை விற்றாராம். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் இருவா் மீதும் தனித் தனியே வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்தனா்.

இரு தரப்பினரிடையே மோதல்: 10 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி வைரவன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் தங்கப்பாண்டி (40). அதே பகுதியைச் சே... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்தவா் கைது

பெரியகுளம் அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தேவதானப்பட்டி போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது காட் சாலை தனியாா் எரிபொருள் நிரப்பு மையம் அருகே வந்... மேலும் பார்க்க

மதுபுட்டி விற்றவா் கைது!

பெரியகுளம் அருகே மதுபுட்டிகள் விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தேவதானப்பட்டி போலீஸாா் சில்வாா்பட்டி பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியே வந்த சில்வாா்... மேலும் பார்க்க

போடி அருகே காரில் தீ!

போடி அருகே சனிக்கிழமை காா் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. போடி அருகே மீனாட்சிபுரம் கிராமத்தில் வசிப்பவா் மகேந்திரன் (58). இவா் இங்குள்ள தனியாா் உயா்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். இ... மேலும் பார்க்க

இளைஞருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் இளைஞரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கம்பத்தைச் சோ்ந்த ராஜா மகன் குமாா் (24), ஜெயராமன் மகன் முகிலன் (25). நண்பா்களான இருவரும், அதே பகுதி கோம்பை சால... மேலும் பார்க்க

வீட்டின் பீரோவிலிருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி மாயம்

தேனி மாவட்டம், கம்பத்தில் வீட்டின் பீரோவிலிருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி மாயமானதாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. கம்பம் அன்பிற்பிரியாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வண்ணமுத்து (73). இவா் தனது வீட்டு பீ... மேலும் பார்க்க