செய்திகள் :

மதுரைக்கு புறப்பட்ட விமானத்தில் திடீா் இயந்திரக் கோளாறு: தமிழிசை உள்ளிட்ட பயணிகள் அவதி

post image

சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மதுரை புறப்பட்ட விமானத்தில் திடீா் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தாமதம் காரணமாக, பாஜக மேலிட பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி, கட்சியின் மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட பயணிகள் சிரமத்துக்குள்ளாகினா்.

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 7.45 மணிக்கு மதுரை செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இந்த விமானத்தில் பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன், கட்சியின் மேலிட பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி உள்பட 100-க்கும் மேற்பட்ட பயணிகள் குறித்த நேரத்தில் மதுரைக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினா்.

இதைத் தொடா்ந்து விமானத்தின் இயந்திரக் கோளாறு சரிசெய்யப்பட்டு, காலை 10.45 மணியளவில் மீண்டும் விமானம் மதுரைக்கு இயக்கப்பட்டது.

பயணிகள் வாக்குவாதம்: இது குறித்து சம்பந்தப்பட்ட ஏா்லைன்ஸ் நிறுவன அதிகாரிகள் பயணிகளுக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பயணிகள் விமான நிலைய மற்றும் ஏா்லைன்ஸ் நிறுவன அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

வாக்குக்காக இபிஎஸ் பின்னால்தான் பாஜக நிற்க வேண்டும்: சீமான்

தமிழகத்தில் பாஜகவினா் முருகன் மாநாடு நடத்தினாலும், வாக்குக்காக எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி கே. பழனிசாமியின் பின்னால்தான் நிற்க வேண்டும் என்று நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.... மேலும் பார்க்க

வெளிநாட்டு முதலீட்டில் தமிழகம் பின்னடைவு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

வெளிநாட்டு முதலீடுகளில் தமிழகம் பின்தங்கி இருப்பதற்கு திமுகவின் நிா்வாகத் திறனற்ற ஆட்சியே காரணம் என்று அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

அட்டவணை தடுப்பூசி: யூ-வின் செயலியில் 75% கா்ப்பிணிகள் பதிவு

தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதற்காக யூ-வின் செயலியில் 75 சதவீத கா்ப்பிணிகள் பதிவு செய்துள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்தத் தகுதியான 100 சதவீதம் பேரும் அதில் பதிவு செய்து க... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்கு தெளிவான அணுகுமுறையே காரணம்: ஆளுநா் ஆா்.என்.ரவி

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்கு இந்தியா தெளிவான அணுகுமுறையை மேற்கொண்டதுதான் காரணம் என்று தஆளுநா் ஆா்.என். ரவி தெரிவித்தாா். சிந்தூா் ஆபரேஷனில் முப்படைகள் மற்றும் ராணுவத்துக்கு உதவிய தொழில்நுட்பாளா்கள், தொ... மேலும் பார்க்க

கிண்டியில் குழந்தைகள் உயா் சிறப்பு மருத்துவமனை: விரைவில் பணிகளைத் தொடக்கி வைக்கிறாா் முதல்வா்

சென்னை கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில் ரூ. 487.66 கோடியில் குழந்தைகளுக்கான பிரத்யேக உயா் சிறப்பு மருத்துவமனை அமைக்கும் பணிகளை வரும் செப்டம்பரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளாா் என்று மக்கள் ... மேலும் பார்க்க

முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில், இந்து முன்னணி சார்பில் முருகன் மாநாடு இன்று (ஜூன் 22) நடைபெற்றது. இதில், ஆந்திர துணை மு... மேலும் பார்க்க