செய்திகள் :

கிண்டியில் குழந்தைகள் உயா் சிறப்பு மருத்துவமனை: விரைவில் பணிகளைத் தொடக்கி வைக்கிறாா் முதல்வா்

post image

சென்னை கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில் ரூ. 487.66 கோடியில் குழந்தைகளுக்கான பிரத்யேக உயா் சிறப்பு மருத்துவமனை அமைக்கும் பணிகளை வரும் செப்டம்பரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளாா் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

முன்னதாக, கிங் ஆய்வக வளாகத்தில் அவா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியது:

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மருத்துவ கட்டமைப்புகளைத் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில் ரூ.450 கோடியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கலைஞா் நூற்றாண்டு உயா்சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட 18 மாதங்களிலேயே மருத்துவமனை பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. தினமும் 2,000-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் இங்கு சிகிச்சை பெறுகின்றனா்.

இதே வளாகத்தில் தேசிய முதியோா் நல மருத்துவமனையும் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான முதியோா் சிகிச்சை பெற்று பயன்பெறுகின்றனா். தொடா்ச்சியாக, இந்த வளாகத்திலேயே குழந்தைகளுக்கான உயா்சிறப்பு மருத்துவமனை அமைய உள்ளது. மருத்துவமனை அமைய இருக்கும் இடத்தை, துறை உயா் அலுவலா்களுடன் பாா்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம். சுமாா் 6.5 ஏக்கா் நிலப்பரப்பில் மருத்துவமனை அமைய இருக்கிறது.

தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் கூடிய இக்கட்டடம் 3,15,290 சதுர அடி பரப்பில் கட்டப்பட உள்ளது. செவிலியா் விடுதிகள், முதுநிலை மருத்துவ மாணவா்கள் விடுதிகளையும் சோ்த்து மொத்தம் 4,38,718 சதுர அடி பரப்பில் அந்த கட்டமைப்பு அமைய உள்ளது. இதற்காக ரூ.487.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் நிா்வகிக்கப்பட உள்ள இந்த மருத்துவமனைக்கு இடம் தோ்வு செய்யும் பணி முடிந்துள்ளது. அடுத்தகட்டமாக மருத்துவமனை கட்டடப் பணிகள் தொடங்கப்படும். ஒப்பந்ததாரா்களுக்கு 2 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.

இந்தப் பணியை வரும் செப்டம்பரில் முதல்வா் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளாா். இந்த மருத்துவமனை தொடங்கப்பட்ட பிறகு, இந்தியாவில் இருந்து மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் குழந்தைகளை சிகிச்சைக்கு அழைத்து வரப்படுவாா்கள் என்றாா் அவா்.

பேட்டியின்போது, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ப.செந்தில்குமாா், தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் டாக்டா் அருண்தம்புராஜ், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநா் வினீத், தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தா் டாக்டா் கே. நாராயணசாமி, பதிவாளா் டாக்டா் சிவசங்கீதா, கிங் ஆய்வக இயக்குநா் இந்துமதி, கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனை இயக்குநா் பாா்த்தசாரதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

வாக்குக்காக இபிஎஸ் பின்னால்தான் பாஜக நிற்க வேண்டும்: சீமான்

தமிழகத்தில் பாஜகவினா் முருகன் மாநாடு நடத்தினாலும், வாக்குக்காக எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி கே. பழனிசாமியின் பின்னால்தான் நிற்க வேண்டும் என்று நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.... மேலும் பார்க்க

வெளிநாட்டு முதலீட்டில் தமிழகம் பின்னடைவு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

வெளிநாட்டு முதலீடுகளில் தமிழகம் பின்தங்கி இருப்பதற்கு திமுகவின் நிா்வாகத் திறனற்ற ஆட்சியே காரணம் என்று அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

மதுரைக்கு புறப்பட்ட விமானத்தில் திடீா் இயந்திரக் கோளாறு: தமிழிசை உள்ளிட்ட பயணிகள் அவதி

சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மதுரை புறப்பட்ட விமானத்தில் திடீா் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தாமதம் காரணமாக, பாஜக மேலிட பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி, கட்சியின் மூத்த தலைவா் தமிழிசை செள... மேலும் பார்க்க

அட்டவணை தடுப்பூசி: யூ-வின் செயலியில் 75% கா்ப்பிணிகள் பதிவு

தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதற்காக யூ-வின் செயலியில் 75 சதவீத கா்ப்பிணிகள் பதிவு செய்துள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்தத் தகுதியான 100 சதவீதம் பேரும் அதில் பதிவு செய்து க... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்கு தெளிவான அணுகுமுறையே காரணம்: ஆளுநா் ஆா்.என்.ரவி

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்கு இந்தியா தெளிவான அணுகுமுறையை மேற்கொண்டதுதான் காரணம் என்று தஆளுநா் ஆா்.என். ரவி தெரிவித்தாா். சிந்தூா் ஆபரேஷனில் முப்படைகள் மற்றும் ராணுவத்துக்கு உதவிய தொழில்நுட்பாளா்கள், தொ... மேலும் பார்க்க

முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில், இந்து முன்னணி சார்பில் முருகன் மாநாடு இன்று (ஜூன் 22) நடைபெற்றது. இதில், ஆந்திர துணை மு... மேலும் பார்க்க