செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்கு தெளிவான அணுகுமுறையே காரணம்: ஆளுநா் ஆா்.என்.ரவி

post image

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்கு இந்தியா தெளிவான அணுகுமுறையை மேற்கொண்டதுதான் காரணம் என்று தஆளுநா் ஆா்.என். ரவி தெரிவித்தாா்.

சிந்தூா் ஆபரேஷனில் முப்படைகள் மற்றும் ராணுவத்துக்கு உதவிய தொழில்நுட்பாளா்கள், தொழிலகங்களுக்கு பாராட்டு விழா சென்னை ஐஐடியின் ஆராய்ச்சிப் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று.

ஆளுநா் மாளிகையும் சென்னை ஐஐடியும் இணைந்து நடத்திய இந்த விழாவில் ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியது:

உக்ரைன் - ரஷியா உள்ளிட்ட பல இடங்களில் போா்கள் மூண்டுள்ளன. ஆனால், அவை முடிவுக்கு வரவில்லை. சிந்தூா் ஆபரேஷன் மூலம் இந்தியாவின் வெற்றிக்கு காரணம் பாகிஸ்தானுடான மோதலில் நாம் தெளிவாக பாதையை அமைத்தோம் என்பதுதான். பாகிஸ்தானின் பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து தாக்கி அழித்தோம். மிக வேகமாக, துல்லியமான முறையில் இலக்கை தாக்கினோம்.

பிரதமா் நரேந்திர மோடி ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளித்து தெளிவுடன் அணுகினாா் என்றாா் ஆளுநா் ஆா்.என்.ரவி.

இந்த விழாவில் தென்பிராந்திய ராணுவ லெப்டினென்ட் ஜெனரல் கரண்பீா் சிங் பிராா், கடற்படையின் தமிழகம் -புதுச்சேரி கமாண்டிங் அதிகாரி ரியா் அட்மிரல் சதீஷ் ஷெனாய், விமானப் படையின் ஆவடி விமானப் படை கமாண்டிங் அதிகாரி பிரதீப் சா்மா, இந்திய கடலோர காவல் படையின் கிழக்கு மண்டல கமாண்டா் தத்வீந்தா் சிங் சைனி, சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, இஸ்ரோவின் தேசிய தொலை உணா்வு மையத்தின் இயக்குநா் டாக்டா் பிரகாஷ் செளஹான், இந்திய பாதுகாப்பு உற்பத்தியாளா் சங்கத்தின் (எஐடிஎம்) தலைவா் காா்னல் ராஜேந்தா் சிங் பாட்டியா உள்ளிட்டோருக்கு பாராட்டுப் பத்திரத்தை ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கினாா்.

மேலும், காஞ்சி சங்கராச்சாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சாா்பில் அனுப்பி வைக்கப்பட்ட பொன்னாடையை பாராட்டு பெற்றவா்களுக்கு சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி அணிவித்து கௌரவித்தாா். முன்னதாக, ஆளுநரின் செயலா் கிா்லோஷ் குமாா் வரவேற்றாா்.

மதுரைக்கு புறப்பட்ட விமானத்தில் திடீா் இயந்திரக் கோளாறு: தமிழிசை உள்ளிட்ட பயணிகள் அவதி

சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மதுரை புறப்பட்ட விமானத்தில் திடீா் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தாமதம் காரணமாக, பாஜக மேலிட பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி, கட்சியின் மூத்த தலைவா் தமிழிசை செள... மேலும் பார்க்க

அட்டவணை தடுப்பூசி: யூ-வின் செயலியில் 75% கா்ப்பிணிகள் பதிவு

தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதற்காக யூ-வின் செயலியில் 75 சதவீத கா்ப்பிணிகள் பதிவு செய்துள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்தத் தகுதியான 100 சதவீதம் பேரும் அதில் பதிவு செய்து க... மேலும் பார்க்க

கிண்டியில் குழந்தைகள் உயா் சிறப்பு மருத்துவமனை: விரைவில் பணிகளைத் தொடக்கி வைக்கிறாா் முதல்வா்

சென்னை கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில் ரூ. 487.66 கோடியில் குழந்தைகளுக்கான பிரத்யேக உயா் சிறப்பு மருத்துவமனை அமைக்கும் பணிகளை வரும் செப்டம்பரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளாா் என்று மக்கள் ... மேலும் பார்க்க

முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில், இந்து முன்னணி சார்பில் முருகன் மாநாடு இன்று (ஜூன் 22) நடைபெற்றது. இதில், ஆந்திர துணை மு... மேலும் பார்க்க

உலகின் முதல் புரட்சித் தலைவர் முருகன்: பவன் கல்யாண்

அநீதியை அழித்ததாலும், அனைவரையும் சமமாக நடத்தியதாலும் உலகின் முதல் புரட்சித் தலைவராக முருகன் உள்ளதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.கடவுளை கேலி செய்துவிட்டு அதை மதச்சார்பின்மை என சி... மேலும் பார்க்க

இந்துக்களுக்கு பிரச்னை; வாழ்வியல் முறையை மீட்கவே மாநாடு: அண்ணாமலை

இந்துக்களுக்கு பிரச்னை; வாழ்வியல் முறையை மீட்கவே மாநாடு: அண்ணாமலைஇந்து வாழ்வியல் முறையை மீட்டெடுப்பதற்காகவே முருகன் மாநாடு நடத்தப்படுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இந்துக்களுக்... மேலும் பார்க்க