முருக பக்தா்கள் மாநாடு அல்ல; அரசியல் மாநாடு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு
இந்துக்களுக்கு பிரச்னை; வாழ்வியல் முறையை மீட்கவே மாநாடு: அண்ணாமலை
இந்துக்களுக்கு பிரச்னை; வாழ்வியல் முறையை மீட்கவே மாநாடு: அண்ணாமலை
இந்து வாழ்வியல் முறையை மீட்டெடுப்பதற்காகவே முருகன் மாநாடு நடத்தப்படுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இந்துக்களுக்கு பிரச்னை ஏற்பட்டு வருவதாகவும், மொழி, ஆன்மீகம், இலக்கியம் என மூன்றும் ஒன்றாக இருக்கும் பெருமை தமிழுக்கு உண்டு எனவும் குறிப்பிட்டார்.
மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருகன் மாநாடு இன்று (ஜூன் 22) நடைபெற்று வருகிறது.
இதில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டப் பலர் பங்கேற்றுள்ளனர்.
இதில் அண்ணாமலை பேசியதாவது,
வாழ்வியல் முறையை மீட்டெடுப்பதற்காக ஒன்றுணைந்துள்ளோம். இந்துக்களுக்கு தொடர்ந்து பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன.
நம் வாழ்வியல் முறையை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு நாம் கொடுக்க வேண்டும்.
மொழி, ஆன்மீகம், இலக்கியம் என மூன்றும் ஒன்றாக இருக்கும் பெருமை தமிழுக்கு உண்டு
கந்த சஷ்டி கவசத்தில் அறிவியல், விஞ்ஞானம் உள்ளது.
இந்துக்களுக்கு ஒரு சட்டம், இந்து மதம் அல்லாதவர்களுக்கு வேறு சட்டம் எதற்காக?
செல்ஃபி கேட்டால் ஒரு அரசியல் தலைவர் திருநீறை அழித்துவிட்டு போட்டோக்கு போஸ் கொடுக்கிறார்.