செய்திகள் :

இந்துக்களுக்கு பிரச்னை; வாழ்வியல் முறையை மீட்கவே மாநாடு: அண்ணாமலை

post image

இந்துக்களுக்கு பிரச்னை; வாழ்வியல் முறையை மீட்கவே மாநாடு: அண்ணாமலை

இந்து வாழ்வியல் முறையை மீட்டெடுப்பதற்காகவே முருகன் மாநாடு நடத்தப்படுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இந்துக்களுக்கு பிரச்னை ஏற்பட்டு வருவதாகவும், மொழி, ஆன்மீகம், இலக்கியம் என மூன்றும் ஒன்றாக இருக்கும் பெருமை தமிழுக்கு உண்டு எனவும் குறிப்பிட்டார்.

மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருகன் மாநாடு இன்று (ஜூன் 22) நடைபெற்று வருகிறது.

இதில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டப் பலர் பங்கேற்றுள்ளனர்.

இதில் அண்ணாமலை பேசியதாவது,

வாழ்வியல் முறையை மீட்டெடுப்பதற்காக ஒன்றுணைந்துள்ளோம். இந்துக்களுக்கு தொடர்ந்து பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன.

நம் வாழ்வியல் முறையை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு நாம் கொடுக்க வேண்டும்.

மொழி, ஆன்மீகம், இலக்கியம் என மூன்றும் ஒன்றாக இருக்கும் பெருமை தமிழுக்கு உண்டு

கந்த சஷ்டி கவசத்தில் அறிவியல், விஞ்ஞானம் உள்ளது.

இந்துக்களுக்கு ஒரு சட்டம், இந்து மதம் அல்லாதவர்களுக்கு வேறு சட்டம் எதற்காக?

செல்ஃபி கேட்டால் ஒரு அரசியல் தலைவர் திருநீறை அழித்துவிட்டு போட்டோக்கு போஸ் கொடுக்கிறார்.

முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில், இந்து முன்னணி சார்பில் முருகன் மாநாடு இன்று (ஜூன் 22) நடைபெற்றது. இதில், ஆந்திர துணை மு... மேலும் பார்க்க

உலகின் முதல் புரட்சித் தலைவர் முருகன்: பவன் கல்யாண்

அநீதியை அழித்ததாலும், அனைவரையும் சமமாக நடத்தியதாலும் உலகின் முதல் புரட்சித் தலைவராக முருகன் உள்ளதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.கடவுளை கேலி செய்துவிட்டு அதை மதச்சார்பின்மை என சி... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

முருக பக்தர்கள் ஒருங்கிணைவது திருமாவளவன் போன்றவர்களுக்கு ஏன் பிடிக்கவில்லை?: எல்.முருகன்

முருக பக்தர்கள் ஒருங்கிணைவது திருமாவளவன் போன்றவர்களுக்கு ஏன் பிடிக்கவில்லை? என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகத... மேலும் பார்க்க

பவன் கல்யாண் வரவிருந்த விமானத்தில் கோளாறு !

ஆந்திர துணை முதுல்வர் பவன் கல்யாண் மதுரைக்கு வரவிருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வரவிருந்த நிலையில் விமானத்தில் கோளாறு ... மேலும் பார்க்க

ரூ.17,154 கோடியில் 9.620 கி.மீ. நீளச் சாலைப் பணிகள்! நெடுஞ்சாலைத் துறையில் புதிய வரலாறு!

தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியில் சாலைத் திட்டங்கள் - மேம்பாலப் பணிகளால் இந்தியாவில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையிலும் சிறந்த மாநிலம் எனப் புதிய வரலாறு படைத்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது... மேலும் பார்க்க