செய்திகள் :

உலகின் முதல் புரட்சித் தலைவர் முருகன்: பவன் கல்யாண்

post image

அநீதியை அழித்ததாலும், அனைவரையும் சமமாக நடத்தியதாலும் உலகின் முதல் புரட்சித் தலைவராக முருகன் உள்ளதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

கடவுளை கேலி செய்துவிட்டு அதை மதச்சார்பின்மை என சிலர் பேசுவதாகவும், அரேபியாவில் இருந்து வந்த மதம் பற்றி பேச முடியுமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருகன் மாநாடு இன்று (ஜூன் 22) நடைபெற்று வருகிறது.

இதில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டப் பலர் பங்கேற்றுள்ளனர்.

இதில் பவன் கல்யாண் பேசியதாவது,

உலகம் முழுவதும் பரந்து நிறைந்துள்ளார் முருகன். இருந்தாலும் அவர் பாதம் தமிழ்நாட்டில் உள்ளது. அதனால், இந்த மண்ணை வணங்குகிறேன். அந்தக் காரணத்தாலேயே தமிழ்நாட்டில் முருகன் மாநாடு நடக்கிறது.

சிலர் நிறத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்; இந்து மதத்தில் நிறத்தில் எந்த பேதமும் இல்லை. கிருஷ்ணர் கருப்பு, காளியும் கருப்பு.

ஆனால், நிறத்தை வைத்து முருகனை சீண்டி பார்க்கிறது ஒரு கூட்டம். கந்த சஷ்டி கவசத்தை சிலர் கிண்டல் செய்கின்றனர். கடவுளை கேலி செய்துவிட்டு அதை மதச்சார்பின்மை என்கின்றனர்.

அரசமைப்பு கொடுத்த சுதந்திரத்தைப் பயன்படுத்தி இவ்வாறு பேசுகின்றனர். நம்மை காப்பாற்றும் முருகனை நாம் காப்பாற்ற வேண்டும்.

மற்றவர்கள் நம்பிக்கையை கொச்சைப்படுத்த அவர்கள் யார்? அவர்களால் மற்றவர்கள் பற்றி இது போல பேச முடியுமா? எனது உரிமையை கொண்டாட எனக்கு உரிமை உள்ளது? அதை நீங்கள் கேள்வி கேட்கலாமா? அரேபியாவில் இருந்து வந்த மதம் பற்றி பேச முடியுமா?

முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில், இந்து முன்னணி சார்பில் முருகன் மாநாடு இன்று (ஜூன் 22) நடைபெற்றது. இதில், ஆந்திர துணை மு... மேலும் பார்க்க

இந்துக்களுக்கு பிரச்னை; வாழ்வியல் முறையை மீட்கவே மாநாடு: அண்ணாமலை

இந்துக்களுக்கு பிரச்னை; வாழ்வியல் முறையை மீட்கவே மாநாடு: அண்ணாமலைஇந்து வாழ்வியல் முறையை மீட்டெடுப்பதற்காகவே முருகன் மாநாடு நடத்தப்படுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இந்துக்களுக்... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

முருக பக்தர்கள் ஒருங்கிணைவது திருமாவளவன் போன்றவர்களுக்கு ஏன் பிடிக்கவில்லை?: எல்.முருகன்

முருக பக்தர்கள் ஒருங்கிணைவது திருமாவளவன் போன்றவர்களுக்கு ஏன் பிடிக்கவில்லை? என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகத... மேலும் பார்க்க

பவன் கல்யாண் வரவிருந்த விமானத்தில் கோளாறு !

ஆந்திர துணை முதுல்வர் பவன் கல்யாண் மதுரைக்கு வரவிருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வரவிருந்த நிலையில் விமானத்தில் கோளாறு ... மேலும் பார்க்க

ரூ.17,154 கோடியில் 9.620 கி.மீ. நீளச் சாலைப் பணிகள்! நெடுஞ்சாலைத் துறையில் புதிய வரலாறு!

தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியில் சாலைத் திட்டங்கள் - மேம்பாலப் பணிகளால் இந்தியாவில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையிலும் சிறந்த மாநிலம் எனப் புதிய வரலாறு படைத்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது... மேலும் பார்க்க