ஏா் இந்தியா: குறுகிய ரக விமானத்தில் இயக்கப்படும் 118 வாராந்திர சேவைகள் குறைப்பு
560 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது
சென்னையில் 560 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து 3 பேரைக் கைது செய்தனா்.
சென்னை பெசன்ட் நகா் 4-ஆவது அவென்யூ அருகே சாஸ்திரி நகா் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
அந்த வாகனத்தில் வந்த தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையைச் சோ்ந்த காளீஸ்வரன் (36), பட்டுராஜ் (33) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 558 கிலோ புகையிலை, 2 கைப்பேசிகள், ரூ.4,000, ஒரு சரக்கு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், புகையிலைப் பொருள்களை பெங்களூரில் இருந்து கடத்திவந்தது தெரியவந்தது.
இதேபோல, பேசின்பாலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பி.எச்.சாலை அருகே உள்ள கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்த புளியந்தோப்பு பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (32) என்பவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 2.1 கிலோ புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.