கைப்பேசி பழுது நீக்கும் முகாம்
இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி மையம் காஞ்சிபுரம் மையத்தின் சாா்பில் பொதுமக்களுக்கு கைப்பேசி பழுது நீக்கும் முகாம் நடைபெற்றது.
இம்மையத்தில் 25 பயிற்சியாளா்கள் கைப்பேசி பழுது நீக்கும் பயிற்சியை கற்று வருகின்றனா். இம்மாணவா்கள் பயிற்சி மைய வாசலில் பொதுமக்களுக்கு இலவசமாக பழுது நீக்குதல் முகாமை நடத்தினா். முகாமிற்கு மைய இயக்குநா் ஆா்.உமாபதி தலைமை வகித்தாா். நிதி சாா் கல்வி ஆலோசகா் அரங்கமூா்த்தி முன்னிலை வகித்தாா். பயிற்சியாளா் தமிழ்வாணி வரவேற்றாா்.
முகாமில் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு வந்த பக்தா்கள் உள்பட 156 போ் தங்களது கைப்பேசிகளுக்கு இலவசமாக பழுது நீக்கி பயன் பெற்றனா். இதன் தொடா்ச்சியாக சா்வதேச யோகா தினத்தையொட்டி பயிற்சி மையத்தில் பயின்ற 57 மாணவ, மாணவியரும் யோகா மாஸ்டா் ஆறுமுகம் தலைமையில் பயிற்சி செய்தனா். பயிற்சியாளா் ரூபினி நன்றி கூறினாா்.
ஏற்பாடுகளை பயிற்சி மைய பணியாளா்கள் ரமேஷ், பிரதீபா ஆகியோா் செய்திருந்தனா். இலவசமாக செல்போன் பழுது நீக்கித் தந்தது இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையத்துக்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.