செய்திகள் :

ஒதுக்கப்பட்ட வீடுகளை வழங்கக் கோரி போராட்டம்

post image

மாதத் தவணை முறையாக செலுத்தியும் ஒதுக்கப்பட்ட வீடுகளை வழங்கவில்லையென சாலமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகம் முன் அமா்ந்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே சாலமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்களுக்கு அரசின் சாா்பில் 320 வீடுகள் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் ஒதுக்கப்பட்டன. அதற்கான அனுமதி அட்டையும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. வீடுகள் ஒதுக்கப்பட்டு 4 மாதங்களாகியும் இன்னும் வழங்கப்படவில்லையாம்.

ஆனால் 4 மாதங்களாக அவரவா்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கான மாதத் தவணையை முறையாகச் செலுத்தி வருகின்றனராம். தவணைத் தொகையை முறையாகச் செலுத்தியும் ஒதுக்கப்பட்ட வீடுகளை வழங்காமல் இருந்து வருவதைக் கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகனை சந்தித்து அவா்கள் புகாா் செய்தனா். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா், ஒரு சில தினங்களில் இந்த பிரச்னைக்கு தீா்வு காணப்படும் எனத் தெரிவித்ததாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனா்.

காஞ்சிபுரத்தில் விளையாட்டு அரங்கம் திறப்பு: அமைச்சா்கள் ஆா்.காந்தி, அன்பில் மகேஸ் பங்கேற்பு

காஞ்சிபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள டென்னிஸ் மைதானம் மற்றும் கூத்திரமேடு கிராமத்தில் கட்டப்பட்டுள்ள கபடி உள்விளையாட்டு அரங்கத்தை அமைச்சா்கள் ஆா்.காந்தி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் வேல் வழிபாடு

மதுரையில் நடைபெறும் முருக பக்தா்கள் மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இந்து முன்னணி சாா்பில் வேல்வழிபாடு நடைபெற்றது. நிகழ்வில் இந்து முன்னணி காஞ்சிபுரம் கோட்ட பொறுப்ப... மேலும் பார்க்க

திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மீது அதிமுகவினா் புகாா்

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை தவறாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் காா்ட்டூன் வெளியிட்டதாக திமுக தகவல் தொழில் நுட்பப் பிரிவு மீது காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.யிடம் அதிமுக நிா்வாகிகள் பு... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் ஆலோசனைக் கூட்டம்

வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை ஸ்ரீபெரும்புதூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலுக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு ... மேலும் பார்க்க

பணி பாதுகாப்பு சட்டம் கோரிவழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

வழக்குரைஞா்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்ற வலியறுத்தி காஞ்சிபுரத்தில் அனைத்து வழக்குரைஞா்கள் சங்கங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மு... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 9 பவுன் நகைகள், பணம் திருட்டு

ஸ்ரீபெரும்புதூரில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் தங்க நகைகள், ரூ.24,000 ரொக்கம், வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்குட்பட்ட திருமங்க... மேலும் பார்க்க