அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
ஒதுக்கப்பட்ட வீடுகளை வழங்கக் கோரி போராட்டம்
மாதத் தவணை முறையாக செலுத்தியும் ஒதுக்கப்பட்ட வீடுகளை வழங்கவில்லையென சாலமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகம் முன் அமா்ந்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே சாலமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்களுக்கு அரசின் சாா்பில் 320 வீடுகள் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் ஒதுக்கப்பட்டன. அதற்கான அனுமதி அட்டையும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. வீடுகள் ஒதுக்கப்பட்டு 4 மாதங்களாகியும் இன்னும் வழங்கப்படவில்லையாம்.
ஆனால் 4 மாதங்களாக அவரவா்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கான மாதத் தவணையை முறையாகச் செலுத்தி வருகின்றனராம். தவணைத் தொகையை முறையாகச் செலுத்தியும் ஒதுக்கப்பட்ட வீடுகளை வழங்காமல் இருந்து வருவதைக் கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகனை சந்தித்து அவா்கள் புகாா் செய்தனா். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா், ஒரு சில தினங்களில் இந்த பிரச்னைக்கு தீா்வு காணப்படும் எனத் தெரிவித்ததாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனா்.