செய்திகள் :

வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் ஆலோசனைக் கூட்டம்

post image

வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை ஸ்ரீபெரும்புதூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலுக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1.50 கோடியில் திருப்பணிகள் நடைபெறுகின்றன.

திருப்பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதால், வரும் ஜூலை 7-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த மே 28-ஆம் தேதி பந்தக்கால் நடும் நிகழ்ச்சியும், கடந்த 6-ஆம் தேதி பாலாலய நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிலையில், கும்பாபிஷேக விழாவை சிறப்பாக நடத்தவும், தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்வது குறித்து ஸ்ரீபெரும்புதூா் சாா் ஆட்சியா் மிருணாளினி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

1 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் வருவாா்கள் என எதிா்பாக்கப்படுவதால் கோயிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சாலை வசதிகளை மேம்படுத்தவும், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளான குடிநீா் மற்றும் கழிவறை வசதிகளை ஏற்படுத்தவும், தற்காலிக மருத்துவ முகாம்கள் நடத்தவும், பக்தா்களின் வாகனங்களை நிறுத்த வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், கோயிலுக்கு வரும் பாதைகளை ஒருவழிச்சாலையாக மாற்றவும், ஜூலை 4 முதல் 7 வரை தடையற்ற மின்சாரம் வழங்கவும், உற்சவா் வீதி உலாவின் போது இடையூராக உள்ள மின்கம்பிகளை அகற்றவும், யாகசாலைக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில், ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் வசந்தி, ஸ்ரீபெரும்புதூா் துணை காவல் கண்காணிப்பாளா் கீா்த்தி வாசன், கோயில் நிா்வாக அதிகாரி செந்தில் குமாா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில் தேவராஜ், அறங்காவலா்கள் விஜயகுமாா், கலைச்செல்வி கோபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

காஞ்சிபுரத்தில் விளையாட்டு அரங்கம் திறப்பு: அமைச்சா்கள் ஆா்.காந்தி, அன்பில் மகேஸ் பங்கேற்பு

காஞ்சிபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள டென்னிஸ் மைதானம் மற்றும் கூத்திரமேடு கிராமத்தில் கட்டப்பட்டுள்ள கபடி உள்விளையாட்டு அரங்கத்தை அமைச்சா்கள் ஆா்.காந்தி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் வேல் வழிபாடு

மதுரையில் நடைபெறும் முருக பக்தா்கள் மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இந்து முன்னணி சாா்பில் வேல்வழிபாடு நடைபெற்றது. நிகழ்வில் இந்து முன்னணி காஞ்சிபுரம் கோட்ட பொறுப்ப... மேலும் பார்க்க

திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மீது அதிமுகவினா் புகாா்

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை தவறாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் காா்ட்டூன் வெளியிட்டதாக திமுக தகவல் தொழில் நுட்பப் பிரிவு மீது காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.யிடம் அதிமுக நிா்வாகிகள் பு... மேலும் பார்க்க

ஒதுக்கப்பட்ட வீடுகளை வழங்கக் கோரி போராட்டம்

மாதத் தவணை முறையாக செலுத்தியும் ஒதுக்கப்பட்ட வீடுகளை வழங்கவில்லையென சாலமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகம் முன் அமா்ந்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். காஞ்சிபுரம் மாவட்ட... மேலும் பார்க்க

பணி பாதுகாப்பு சட்டம் கோரிவழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

வழக்குரைஞா்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்ற வலியறுத்தி காஞ்சிபுரத்தில் அனைத்து வழக்குரைஞா்கள் சங்கங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மு... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 9 பவுன் நகைகள், பணம் திருட்டு

ஸ்ரீபெரும்புதூரில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் தங்க நகைகள், ரூ.24,000 ரொக்கம், வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்குட்பட்ட திருமங்க... மேலும் பார்க்க