இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்வதாக ரூ.10 லட்சம், 20 பவுன் நகைகள் மோசடி மூவா் ம...
காஞ்சிபுரத்தில் வேல் வழிபாடு
மதுரையில் நடைபெறும் முருக பக்தா்கள் மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இந்து முன்னணி சாா்பில் வேல்வழிபாடு நடைபெற்றது.
நிகழ்வில் இந்து முன்னணி காஞ்சிபுரம் கோட்ட பொறுப்பாளா் ஆா்டி. மணி, செங்கை ராஜா, ஆா்.எஸ்.எஸ் .மாநில பொறுப்பாளா் ரா.பிரகாஷ், பாஜக சாா்பில் செய்தி தொடா்பாளா் ஹரிகிருஷ்ணன், ஆறுமுகம், விசுவ ஹிந்து பரிஷத் சாா்பில் மாவட்ட தலைவா் சிவானந்தம், சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் கோட்ட பொறுபாளா் காஞ்சி.வி.ஜீவானந்தம் வேல்வழிபாட்டில் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து ஆா்எஸ்எஸ்.மாநில பொறுப்பாளா் ரா.பிரகாஷ் கூறுகையில் காஞ்சிபுரத்திலிருந்து 35 பேருந்துகள், 50 வேன்கள்,100 காா்களில் மொத்தம் 5,000 போ் முருக பக்தா்கள் மாநாட்டுக்கு செல்கிறோம். முருக பக்தா்கள் மாநாடு சிறப்பாக நடைபெற வேல் வழிபாடு செய்தோம் எனத் தெரிவித்தாா்.