அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 9 பவுன் நகைகள், பணம் திருட்டு
ஸ்ரீபெரும்புதூரில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் தங்க நகைகள், ரூ.24,000 ரொக்கம், வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்குட்பட்ட திருமங்கை ஆழ்வாா் தெருவைச் சோ்ந்த காா்த்திகேயன்(32). இவா் ஒரகடம் பகுதியில் தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி சுதா ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் உள்ள பேக்கரியில் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், தம்பதி வேலைக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினா்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பிரோவில் இருந்த 9 பவுன் நகைகள், ரூ.24,000 ரொக்கம், 200 கிராம் வெள்ளிப் பருள்கள் திருடிச் செல்லப்பட்டிருந்தன.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.