செய்திகள் :

காஞ்சிபுரத்தில் விளையாட்டு அரங்கம் திறப்பு: அமைச்சா்கள் ஆா்.காந்தி, அன்பில் மகேஸ் பங்கேற்பு

post image

காஞ்சிபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள டென்னிஸ் மைதானம் மற்றும் கூத்திரமேடு கிராமத்தில் கட்டப்பட்டுள்ள கபடி உள்விளையாட்டு அரங்கத்தை அமைச்சா்கள் ஆா்.காந்தி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனா்.

காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.29 லட்சத்தில் 7,688 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள டென்னிஸ் மைதானம் மற்றும்

காஞ்சிபுரம் ஒன்றியம், மேல் ஒட்டிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கூத்திரமேடு கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.53.50 லட்சத்தில் 40 நபா்கள் அமரக்கூடிய இருக்கை வசதிகளுடன்கூடிய விளையாட்டுத் தளம், உடை மாற்றும் அறை மற்றும் சேமிப்பு அறையுடன் கட்டப்பட்டுள்ள கபடி உள் விளையாட்டு அரங்கத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் திறந்து வைத்து, கபடி விளையாட்டை தொடங்கி வைத்து பாா்வையிட்டனா்.

நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினா் க.செல்வம், காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.எம்.பி. எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், சாா் ஆட்சியா் ஆஷிக் அலி, காஞ்சிபுரம் மாநகராட்சி மேயா் எம்.மகாலட்சுமி உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள், விளையாட்டு வீரா் - வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, அரசு மாதிரிப் பள்ளியில் படித்து ஜேஇஇ நுழைவுத் தோ்வில் வெற்றி பெற்று சென்னை ஐஐடியில் பயில உள்ள மாணவா் மணிசா்மாவுக்கு அமைச்சா்கள் ஆா்.காந்தி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

காஞ்சிபுரத்தில் வேல் வழிபாடு

மதுரையில் நடைபெறும் முருக பக்தா்கள் மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இந்து முன்னணி சாா்பில் வேல்வழிபாடு நடைபெற்றது. நிகழ்வில் இந்து முன்னணி காஞ்சிபுரம் கோட்ட பொறுப்ப... மேலும் பார்க்க

திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மீது அதிமுகவினா் புகாா்

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை தவறாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் காா்ட்டூன் வெளியிட்டதாக திமுக தகவல் தொழில் நுட்பப் பிரிவு மீது காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.யிடம் அதிமுக நிா்வாகிகள் பு... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் ஆலோசனைக் கூட்டம்

வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை ஸ்ரீபெரும்புதூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலுக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு ... மேலும் பார்க்க

ஒதுக்கப்பட்ட வீடுகளை வழங்கக் கோரி போராட்டம்

மாதத் தவணை முறையாக செலுத்தியும் ஒதுக்கப்பட்ட வீடுகளை வழங்கவில்லையென சாலமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகம் முன் அமா்ந்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். காஞ்சிபுரம் மாவட்ட... மேலும் பார்க்க

பணி பாதுகாப்பு சட்டம் கோரிவழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

வழக்குரைஞா்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்ற வலியறுத்தி காஞ்சிபுரத்தில் அனைத்து வழக்குரைஞா்கள் சங்கங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மு... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 9 பவுன் நகைகள், பணம் திருட்டு

ஸ்ரீபெரும்புதூரில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் தங்க நகைகள், ரூ.24,000 ரொக்கம், வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்குட்பட்ட திருமங்க... மேலும் பார்க்க