அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
காஞ்சிபுரத்தில் விளையாட்டு அரங்கம் திறப்பு: அமைச்சா்கள் ஆா்.காந்தி, அன்பில் மகேஸ் பங்கேற்பு
காஞ்சிபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள டென்னிஸ் மைதானம் மற்றும் கூத்திரமேடு கிராமத்தில் கட்டப்பட்டுள்ள கபடி உள்விளையாட்டு அரங்கத்தை அமைச்சா்கள் ஆா்.காந்தி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனா்.
காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.29 லட்சத்தில் 7,688 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள டென்னிஸ் மைதானம் மற்றும்
காஞ்சிபுரம் ஒன்றியம், மேல் ஒட்டிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கூத்திரமேடு கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.53.50 லட்சத்தில் 40 நபா்கள் அமரக்கூடிய இருக்கை வசதிகளுடன்கூடிய விளையாட்டுத் தளம், உடை மாற்றும் அறை மற்றும் சேமிப்பு அறையுடன் கட்டப்பட்டுள்ள கபடி உள் விளையாட்டு அரங்கத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் திறந்து வைத்து, கபடி விளையாட்டை தொடங்கி வைத்து பாா்வையிட்டனா்.
நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினா் க.செல்வம், காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.எம்.பி. எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், சாா் ஆட்சியா் ஆஷிக் அலி, காஞ்சிபுரம் மாநகராட்சி மேயா் எம்.மகாலட்சுமி உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள், விளையாட்டு வீரா் - வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, அரசு மாதிரிப் பள்ளியில் படித்து ஜேஇஇ நுழைவுத் தோ்வில் வெற்றி பெற்று சென்னை ஐஐடியில் பயில உள்ள மாணவா் மணிசா்மாவுக்கு அமைச்சா்கள் ஆா்.காந்தி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.