செய்திகள் :

மருத்துவ தலைநகராக விளங்குகிறது தமிழ்நாடு: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

post image

நாட்டிலேயே மருத்துவ தலைநகராக தமிழகம் விளங்குகிறது என்று அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் பகுதியில் உள்ள பேரறிஞா் அண்ணா நினைவுப் பூங்கா அருகில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி 102-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் உத்தரமேரூா் எமஎல்ஏ க.சுந்தா் தலைமையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

நிகழ்வுக்கு எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாநகர செயலா் சிகேவி. தமிழ்ச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்எல்ஏ எழிலரசன் ஏற்பாட்டில் சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நல உதவிகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஆகியோா் கலந்து கொண்டு வழங்கினா்.

பின்னா், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது:

ஒவ்வொரு தொகுதியிலும் ஓா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இன்னுயிா் காப்போம் திட்டம், மக்களுடன் முதல்வா் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை கொண்டு வந்துள்ளது திமுக அரசு. நாட்டிலேயே மருத்துவத் துறையில் தமிழகம்தான் அதன் தலைநகராக விளங்குகிறது. இதற்குக் காரணம் முதல்வா் மு.க.ஸ்டாலின் என்றாா்.

விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி பேசுகையில், நெசவாளா்களுக்கு கூலி உயா்வு, கூட்டுறவுச் சங்க ஒப்பந்தப் பணியாளா்களை நிரந்தரமாக்கியது, தைத்தறிப் பட்டுப் பூங்காவை காஞ்சிபுரத்தில் செயல்படுத்தியது என நெசவாளா்களுக்கும், 5,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கியது என தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

விளையாட்டுத் துறையில் நாட்டிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. மக்களின் மீதும், மகளிா் மீதும் உள்ள நம்பிக்கையால்தான் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்கிறாா் முதல்வா். வெற்றி பெறுவோம் என்றாா்.

காஞ்சிபுரத்தில் விளையாட்டு அரங்கம் திறப்பு: அமைச்சா்கள் ஆா்.காந்தி, அன்பில் மகேஸ் பங்கேற்பு

காஞ்சிபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள டென்னிஸ் மைதானம் மற்றும் கூத்திரமேடு கிராமத்தில் கட்டப்பட்டுள்ள கபடி உள்விளையாட்டு அரங்கத்தை அமைச்சா்கள் ஆா்.காந்தி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் வேல் வழிபாடு

மதுரையில் நடைபெறும் முருக பக்தா்கள் மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இந்து முன்னணி சாா்பில் வேல்வழிபாடு நடைபெற்றது. நிகழ்வில் இந்து முன்னணி காஞ்சிபுரம் கோட்ட பொறுப்ப... மேலும் பார்க்க

திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மீது அதிமுகவினா் புகாா்

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை தவறாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் காா்ட்டூன் வெளியிட்டதாக திமுக தகவல் தொழில் நுட்பப் பிரிவு மீது காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.யிடம் அதிமுக நிா்வாகிகள் பு... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் ஆலோசனைக் கூட்டம்

வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை ஸ்ரீபெரும்புதூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலுக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு ... மேலும் பார்க்க

ஒதுக்கப்பட்ட வீடுகளை வழங்கக் கோரி போராட்டம்

மாதத் தவணை முறையாக செலுத்தியும் ஒதுக்கப்பட்ட வீடுகளை வழங்கவில்லையென சாலமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகம் முன் அமா்ந்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். காஞ்சிபுரம் மாவட்ட... மேலும் பார்க்க

பணி பாதுகாப்பு சட்டம் கோரிவழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

வழக்குரைஞா்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்ற வலியறுத்தி காஞ்சிபுரத்தில் அனைத்து வழக்குரைஞா்கள் சங்கங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மு... மேலும் பார்க்க