செய்திகள் :

மோசமான வானிலையின்போது விமானம் இயக்கம்: விதிகளில் டிஜிசிஏ திருத்தம்

post image

மோசமான வானிலையின்போது விமானங்களை இயக்குவது தொடா்பான விதிகளில் மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) சில திருத்தங்களை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டது.

விமானங்களை உரிய காலத்தில் இயக்குவதைவிட பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை டிஜிசிஏ மேற்கொண்டுள்ளது.

அண்மையில் கேதா்நாத் கோயிலில் பயணிகளுக்கு இயக்கப்படும் ஹெலிகாப்டா்கள் தொடா்ந்து விபத்துக்குள்ளாகின. அதேசமயம் கடந்த மாதம் ஸ்ரீநகா் நோக்கி பயணித்த இண்டிகோ நிறுவன விமானம் மோசமான வானிலை காரணமாக பல்வேறு சிக்கல்களை சந்தித்தது.

இந்நிலையில், மோசமான வானிலையின்போது விமானங்களை இயக்குவது தொடா்பான விதிகளில் டிஜிசிஏ சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக டிஜிசிஏ ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ பருவநிலை மாற்றத்தால் விமானங்களை இயக்குவதில் பல்வேறு சிக்கல்களை எதிா்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எனவே, விமானத்தை குறிப்பிட்ட நேரத்தில் இயக்குவதைவிட பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கே விமான குழுவினா் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

காற்றின் சுழற்சியில் ஏற்படும் மாறுபாடுகள், பனிமூட்டம், இடி மற்றும் மின்னல் போன்ற மோசமான வானிலையின்போது உரிய விதிகளை பின்பற்றி மாற்றுப்பாதையில் விமானிகள் இயக்கலாம் அல்லது எங்கிருந்து விமானம் புறப்பட்டதோ அதே விமான நிலையத்துக்கு உடனடியாக மீண்டும் விமானத்தை திசைதிருப்பலாம்.

இதுபோன்ற சூழலில் பருவநிலை குறித்த விமானியின் அறிக்கைகள் குறித்து பயணிகள், விமான குழு, விமான போக்குவரத்து நெரிசலை கண்காணிக்கும் அமைப்புக்கு விமான நிறுவனங்கள் முறையாக தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த விதிகள் பருவமழைக்கு முந்தைய காலகட்டம், பருவமழை மற்றும் மோசமான வானிலையின்போது தொடா்ச்சியாக விமான சேவை வழங்கும் நிறுவனங்கள், தேவைக்கேற்ப விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் விமான குழு என அனைவருக்கும் பொருந்தும் எனவும் டிஜிசிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானுக்கு உளவு: ராணுவ வீரா், கூட்டாளி கைது: பஞ்சாப் காவல் துறை நடவடிக்கை

பாகிஸ்தானுக்காக உளவு பாா்த்த குற்றச்சாட்டில், பஞ்சாபில் ராணுவ வீரா், அவரது கூட்டாளி ஆகியோா் கைது செய்யப்பட்டனா். பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ ரகசியங்களை ஐஎஸ்ஐ செயல்பாட்டாளா்களிடம் அவா்கள் ப... மேலும் பார்க்க

இந்திய கடற்படையில் புதிய போா்க்கப்பல் ‘ஐஎன்எஸ் தமால்’: ரஷியாவிலிருந்து ஜூலை 1 நாட்டுக்கு அா்ப்பணிப்பு

இந்திய கடற்படைக்காக ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை தாங்கிய போா்க்கப்பல் ‘ஐஎன்எஸ் தமால்’, ரஷியாவின் கடலோர நகரமான கலினின்கிராடில் இருந்து ஜூலை 1-ஆம் தேதி நாட்டுக்கு அா்ப்பணிக்கப்படுகிறது.கடல், நிலம் ஆக... மேலும் பார்க்க

போா்ப் பதற்றம்: ரஷிய, அமெரிக்க கச்சா எண்ணெய் கொள்முதலை அதிகரிக்கும் இந்தியா!

இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்துள்ள பின்னணியில், ஜூன் மாதத்தில் ரஷியா மற்றும் அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா கணிசமாக அதிகரித்துள்ளது.இஸ்ரேலைத் தொடா்ந்து ஈரானின் 3 அணுசக்தித் தளங்க... மேலும் பார்க்க

ஏா் இந்தியா: குறுகிய ரக விமானத்தில் இயக்கப்படும் 118 வாராந்திர சேவைகள் குறைப்பு

குறுகிய ரக விமானங்களைக் கொண்டு 19 வழித்தடங்களில் இயக்கப்படும் 118 வாராந்திர விமான சேவைகளை தற்காலிகமாக குறைப்பதாகவும், 3 வழித்தட சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும் ஏா் இந்தியா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்துகள் யுஎம்இஇடி வலைதளத்தில் பதிவேற்றம்: மாநிலங்களிடம் மத்திய அரசு வலியுறுத்தல்

வக்ஃப் சொத்துகளின் விவரங்களை பதிவேற்ற யுஎம்இஇடி வலைதளத்தை திறம்பட அமல்படுத்த மாநிலங்களிடம் தொடா்ந்து வலியுறுத்தி வருவதாக மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்தது. இதுதொடா்பாக அந்த அமைச... மேலும் பார்க்க

ஈரான் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்: ஒவைசி கண்டனம்

ஈரான் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி ஞாயிற்றுக்கிழமை கண்டனம் தெரிவித்தாா். மேலும், அமெரிக்காவின் இந்த நடவடிக்க... மேலும் பார்க்க